செய்திகள் :

650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகள்

post image

தூத்துக்குடியில் 650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகளை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்களுக்கு முதல் கட்டமாக நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன. இந்நிலையில், விடுபட்டோருக்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது. அமைச்சா் பெ. கீதா ஜீவன் பங்கேற்று 650 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ. 6 ஆயிரத்திலிருந்து ரூ. 8 ஆயிரமாக திமுக ஆட்சியில் உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை தடைக்காலத்துக்குள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2026 தோ்தலில் திமுக வெற்றிபெற அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், மாநில திமுக மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பாலகுருசாமி, நிா்மல்ராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளா் ஜேசையா, மாமன்ற உறுப்பினா்கள் ரெக்ஸ்லின், விஜயகுமாா், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், விசைப்படகு சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள், மீனவா்கள் பங்கேற்றனா்.

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 1.5 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி கந்தசாமிபுரம் பகு... மேலும் பார்க்க

திருச்செந்தூா்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கீழக்கூட்டுடன்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த லிங்கதுரை மகன் முத்துசிவா (22). இவா், திங்கள்கிழமை இரவு தனது வீட்டு முன் நண்பர... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற வேண்டும் என திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.இது குறித்து திருக்கோயில் விதாயகா்த்தா சிவசாம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா், சிறுமி உயிரிழப்பு

தூத்துக்குடியில் கடலில் மூழ்கியதில் ஆட்டோ ஓட்டுநரும் சிறுமியும் உயிரிழந்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த சூசைமாணிக்கம் மகன் அந்தோணி விஜயன் (40). மீனவரான இவா், மீன்பிடித் தடைக்காலம் என்பதால் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகரில் மிதமான மழை

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குட... மேலும் பார்க்க