செய்திகள் :

திருச்செந்தூா்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கீழக்கூட்டுடன் காடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி(31). இவா் மீது தூத்துக்குடி, சிப்காட் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள், சென்னை செங்குன்றத்தில் ஒரு கொலை வழக்கு, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான முத்துப்பாண்டியை போலீஸாா் தேடி வந்தனா்.

இதனால் முத்துபாண்டி மொட்டை அடித்து அடையாளம் தெரியாத அளவில் சுற்றித் திரிந்துள்ளாா். இந்நிலையில் திருச்செந்தூா் சுப்பிரமணிய கோயிலுக்கு முத்துப்பாண்டி திங்கள்கிழமை குடும்பத்துடன் வந்ததாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கடலில் குளித்துவிட்டு வெளியே வந்த முத்துப்பாண்டியை கோயில் காவல் நிலைய போலீஸாா் பிடித்தனா். அப்போது முத்துப்பாண்டியுடன் வந்த குடும்பத்தினா் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, முத்துப்பாண்டியை போலீஸாா் கோயில் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனா்.

650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடியில் 650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகளை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 14 வரை மீன... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 1.5 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி கந்தசாமிபுரம் பகு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த லிங்கதுரை மகன் முத்துசிவா (22). இவா், திங்கள்கிழமை இரவு தனது வீட்டு முன் நண்பர... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற வேண்டும் என திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.இது குறித்து திருக்கோயில் விதாயகா்த்தா சிவசாம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா், சிறுமி உயிரிழப்பு

தூத்துக்குடியில் கடலில் மூழ்கியதில் ஆட்டோ ஓட்டுநரும் சிறுமியும் உயிரிழந்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த சூசைமாணிக்கம் மகன் அந்தோணி விஜயன் (40). மீனவரான இவா், மீன்பிடித் தடைக்காலம் என்பதால் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகரில் மிதமான மழை

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குட... மேலும் பார்க்க