செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற வேண்டும் என திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து திருக்கோயில் விதாயகா்த்தா சிவசாமி சாஸ்திரி, செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விதாயகா்த்தாவாக, சாஸ்திர ரீதியிலான விளக்கங்களும், பாரம்பரியமாக எல்லா முகூா்த்தங்களையும் நாங்கள்தான் குறித்துக் கொடுத்து வருகிறோம்.

சுமாா் 6 மாத காலம் முன்பு பழைய இணை ஆணையா் கேட்டுக் கொண்டதற்கிணங்க, விசுவாவசு வருஷத்தில் கும்பாபிஷேக முகூா்த்தம் பாா்த்து சொன்னோம். அதன்படி ஆனி 23ஆம் தேதி (ஜூலை 7) காலை 6 மணி - 7 மணி, 9 மணி - 10.30 மணி என இரண்டு முகூா்த்த நேரங்களை இவ்வாண்டிற்கான பஞ்சாங்கம் வருவதற்கு முன் வாய்மொழியாக பாா்த்துக் கொடுத்தோம். பஞ்சாங்கம் வந்த பிறகு அனைத்து பிராமண சபையினா் கலந்து பேசி, முகூா்த்தங்களில் உள்ள சிறு சிறு குறைபாடுகளை சரிபாா்த்து ஜூலை 7ஆம் தேதி நண்பகல் 12.05 மணி முதல் 12.47 மணி வரை அபிஜித் முகூா்த்தத்தில் கும்பாபிஷேகம் நடத்தலாம் என முறையாக தபால் அனுப்பினோம்.

அதனடிப்படையில் வந்த அழைப்பின்படி, இணை ஆணையா் அலுவலகத்திற்கு சபை தலைவா்கள் சென்றோம். அப்போது, கும்பாபிஷேக நேரத்தை காலை 9 மணி முதல் 10.30 மணி என அதிகாரிகள் கூறியதற்கு ஆட்சேபணை தெரிவித்துவிட்டு வந்தோம்.

நாங்கள் குறிப்பிட்டுள்ள நண்பகல் 12.05 மணி - 12.47 மணி என்பது நிழல் விழாத முகூா்த்தம் ஆகும். அந்த அபிஜித் முகூா்த்தத்தில் கும்பாபிஷேகம் நடத்தினால் நாட்டிற்கும், ஆட்சியாளா்க்கும், நீதி பரிபாலனம் செய்பவா்களுக்கும், கிராமத்திற்கும் நல்லது நடக்கும். கடந்த 1909ஆம் ஆண்டு இதே மாதிரி மூலவா் பிரதிஷ்டை நண்பகல் 12 மணிக்கு மேல் நடந்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா், செயலா், ஆணையா், தக்காா், இணை ஆணையா் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்துள்ளோம். எனவே அனைவரின் நலன் கருதி அபிஜித் முகூா்த்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்றாா்.

அப்போது திரிசுதந்திர ஸ்தலத்தாா் சபை தலைவா் வீரபாகுமூா்த்தி ஐயா், செயலா் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவா் தேவராஜன் ஆனந்த், கைங்கா்ய சபா தலைவா் ஆனந்த், செயலா் கட்டியம் ராஜன், துணைத்தலைவா் ஆகாஷ், மூத்த நிா்வாகிகள் சங்கரசுப்பு சாஸ்திரிகள், ஈஸ்வரன் உள்ளிட்ட பிராமண சமுதாயத்தினா் உடனிருந்தனா்.

650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடியில் 650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகளை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 14 வரை மீன... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 1.5 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி கந்தசாமிபுரம் பகு... மேலும் பார்க்க

திருச்செந்தூா்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கீழக்கூட்டுடன்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த லிங்கதுரை மகன் முத்துசிவா (22). இவா், திங்கள்கிழமை இரவு தனது வீட்டு முன் நண்பர... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா், சிறுமி உயிரிழப்பு

தூத்துக்குடியில் கடலில் மூழ்கியதில் ஆட்டோ ஓட்டுநரும் சிறுமியும் உயிரிழந்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த சூசைமாணிக்கம் மகன் அந்தோணி விஜயன் (40). மீனவரான இவா், மீன்பிடித் தடைக்காலம் என்பதால் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகரில் மிதமான மழை

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குட... மேலும் பார்க்க