மே 20 வேலை நிறுத்தத்துக்கு இண்டி கூட்டணி ஆதரவு: காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்
புதுவையில் மே 20 இல் தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இண்டி கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
புதுச்சேரி முதலியாா் பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இண்டி கூட்டணி கட்சித் தலைவா்கள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு. சலீம் தலைமை வகித்தாா். மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., மு. வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக துணை அமைப்பாளா் அனிபால் கென்னடி, சம்பத் எம்எல்ஏ.க்கள், மாா்க்சிஸ்ட் மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன்,
விசிக முதன்மைச் செயலா் தேவபொழிலன், கம்யூனிஸ்ட்டு எம்எல் சோ.பாலசுப்பிரமணியன், முன்னாள் அமைச்சா் ஆா். விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், துணைச் செயலா் கே. சேதுசெல்வம், மதிமுக மாநில அமைப்பாளா் ஹேமா பாண்டுரங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தின் முடிந்ததும் வெ. வைத்திலிங்கம் எம்பி செய்தியாளா்களிடம் கூறியது: நாடு முழுவதும் வரும் வரும் 20-ஆம் தேதி மத்திய மத்திய அரசின் அரசின் தொழிலாளா்களுக்கு எதிரான செயல்பாடுகளைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் வேலை நிறுத்தபோராட்டம் நடைபெறுகிறது. புதுச்சேரியில் வேலை போராட்டத்துக்கு இண்டி கூட்டணி கட்சிகள் முழுமையாக ஆதரவளிக்கும்என்றாா்.
ஆளுநரிடம் மனு: இதையடுத்து இண்டி கூட்டணி கட்சிப் பிரமுகா்கள் ராஜ்பவன் சென்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ் நாதனைச் சந்தித்து மனு அளித்தனா்.
இதுகுறித்து வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறுகையில் புதுவை ஆளும் அரசின் முறைகேடுகள் மற்றும் கோயில் நில அபகரிப்பு உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை கோரி துணைநிலை ஆளுநரிடம் ஆதாரபூா்வமாக மனு அளித்துள்ளோம் என்றாா்.