செய்திகள் :

ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தெரியாது; அஜிங்க்யா ரஹானே அதிர்ச்சி!

post image

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தனக்குத் தெரியாது என இந்திய அணி வீரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (மே 7) அறிவித்தார். அவரது திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடுத்த மாதம் விளையாடவுள்ள நிலையில், ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

அஜிங்க்யா ரஹானே அதிர்ச்சி

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தனக்குத் தெரியாது எனவும், அவரது முடிவு அதிர்ச்சியளிப்பதாக இருப்பதாகவும் இந்திய அணி வீரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடியது. சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாடியதால் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வு முடிவை அஜிங்க்யா ரஹானே அறிந்திருக்கவில்லை.

ரோஹித் சர்மா

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து அவர் பேசியதாவது: டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டாரா? அவர் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் ஓய்வை அறிவித்தது எனக்குத் தெரியாது. அவரது ஓய்வு முடிவு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரது எதிர்கால பயணத்துக்கு எனது வாழ்த்துகள்.

இதையும் படிக்க: ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவில் பிசிசிஐக்கு எந்த தொடர்பும் இல்லை: பிசிசிஐ துணைத் தலைவர்

பேட்ஸ்மேனாக டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 5-வது அல்லது 6-வது வீரராக களமிறங்கி டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய அவர், அணியின் தொடக்க ஆட்டக்காரராக மாறினார். தொடக்க ஆட்டக்காரராக விளையாட அவரை மாற்றிக்கொண்டது மிகவும் அற்புதமாக இருந்தது. பந்துவீச்சாளர்களுக்கு சவாலளிக்கும் விதமாக அவர் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்றார்.

38 வயதாகும் ரோஹித் சர்மா கடந்த 2013 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக  67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 4301 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளதால் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தி... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவில் பிசிசிஐக்கு எந்த தொடர்பும் இல்லை: பிசிசிஐ துணைத் தலைவர்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட முடிவு என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறு... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மாற்றம்! இளம் வீரர் சேர்ப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில... மேலும் பார்க்க

ராவல்பிண்டி திடல் அருகே ட்ரோன் தாக்குதல்! பிஎஸ்எல் போட்டிகள் லாகூருக்கு மாற்றம்!

பாகிஸ்தானில் ராவல்பிண்டி கிரிக்கெட் திடல் அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது... மேலும் பார்க்க

முத்தரப்பு கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிரணி!

தென்னாப்பிரிக்க மகளிருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிரணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு..! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார். கடைசியாக ரோஹித் சர்மா பிஜிடி தொடரில் விளையாடினார். 3-2 என ஆஸ்திரேலியாவுடன் தோல்வியைத் தொடர்ந்து இந்த முடி... மேலும் பார்க்க