செய்திகள் :

ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவில் பிசிசிஐக்கு எந்த தொடர்பும் இல்லை: பிசிசிஐ துணைத் தலைவர்

post image

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட முடிவு என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (மே 7) அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ரோஹித் சர்மா போன்று இந்திய அணிக்காக விளையாடியவர்கள் சிலரே: கபில் தேவ்

பிசிசிஐக்கு எந்த தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென ரோஹித் சர்மா அறிவித்த நிலையில், ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவு அவரது தனிப்பட்ட முடிவு எனவும், பிசிசிஐ தரப்பிலிருந்து எந்த ஒரு அழுத்தமும் அவருக்கு இல்லை எனவும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எந்த ஒரு வீரரையும் ஓய்வு பெற வேண்டும் என பிசிசிஐ தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படாது. வீரர்களின் ஓய்வு குறித்து பிசிசிஐ எதுவும் தெரிவிப்பதும் கிடையாது. ரோஹித் சர்மா மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். ரோஹித் சர்மா கிரிக்கெட்டிலிருந்து முழுவதுமாக ஓய்வு பெறவில்லை என்பது நல்ல விஷயம். அதனால், அவரது அனுபவத்தையும், திறமையையும் நாங்கள் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வோம் என்றார்.

இதையும் படிக்க: ஜிம்பாப்வேவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மாற்றம்! இளம் வீரர் சேர்ப்பு!

38 வயதாகும் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தெரியாது; அஜிங்க்யா ரஹானே அதிர்ச்சி!

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தனக்குத் தெரியாது என இந்திய அணி வீரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதா... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளதால் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தி... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மாற்றம்! இளம் வீரர் சேர்ப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில... மேலும் பார்க்க

ராவல்பிண்டி திடல் அருகே ட்ரோன் தாக்குதல்! பிஎஸ்எல் போட்டிகள் லாகூருக்கு மாற்றம்!

பாகிஸ்தானில் ராவல்பிண்டி கிரிக்கெட் திடல் அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது... மேலும் பார்க்க

முத்தரப்பு கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிரணி!

தென்னாப்பிரிக்க மகளிருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிரணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு..! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார். கடைசியாக ரோஹித் சர்மா பிஜிடி தொடரில் விளையாடினார். 3-2 என ஆஸ்திரேலியாவுடன் தோல்வியைத் தொடர்ந்து இந்த முடி... மேலும் பார்க்க