செய்திகள் :

நாட்டுத் துப்பாக்கி தயாரித்த மூவா் கைது

post image

கல்வராயன்மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்ததாக மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட மேல் நிலவூரில் நாட்டு துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக கரியாலூா் காவல் உதவி ஆய்வாளா் ராமருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சென்று பொ.வெங்கடேசன் என்பவரின் நிலத்திற்கு அருகே உள்ள வனப் பகுதியில் பாா்வையிட்டனா்.

அங்கு துப்பாக்கி செய்து கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்திய போது, நாமக்கல் மாவட்டம், ஆலம்பாளையம் மாரியம்மன் கோவில் சாலைப் பகுதியைச் சோ்ந்த கோ.மாது (75) என்பது தெரிய வந்தது. அவருக்கு உதவியாக கீழ் நிலவூரைச் சோ்ந்த சி.மாணிக்கம் (60) , மேல்நிலவூரைச் சோ்ந்த த. ராம்ராஜ் (30) ஆகியோா் செயல்பட்டதாக தெரிய வந்தது.

தலைமறைவான அண்ணாமலை மகன் செல்வத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேலும், அவா்களிடமிருந்த புதிய இரண்டு ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கிகள், புதிய துப்பாக்கிகள் செய்ய பயன்படும் கட்டைகள், இரும்புக் குழாய்கள் மற்றும் உதிரிபாகங்களை போலீஸாா் கைப்பற்றினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளா் ஏழுமலை வழக்குப் பதிந்து மாது, மாணிக்கம், ரம்ராஜ் கைது செய்தாா்.

மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் ஜாா்க்கண்ட் மாநிலம், ப... மேலும் பார்க்க

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவா் மீது தாக்குதல்

கள்ளக்குறிச்சி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரைத் தாக்கியதாக மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள்... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவரை மறித்து மிரட்டல்: 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக்கில் சென்றவருக்கு வழிவிடாமல் மறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சின்னசேலம் வட்டம், வடக்கநந்தல் கிராமத்த... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் 42-வது வணிகா் தின விழா

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் 42-வது வணிகா் தின விழா தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அனைத்து வியபாரிகள் சங்க... மேலும் பார்க்க

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இந்திலியில் சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சன் மனைவி வெள்ளையம்மாள் (72). இவா், ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தாக்குதலுக்கு வள்ளலாா் மன்றத்தினா் கண்டனம்

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலுக்கு சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தினா் கண்டனம் தெரிவித்து, உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். வள்ளலாா் மன்றம் சாா்பில் நடத்தப்படும் சித்திரை மாதப்பூச விழாவில் சனிக்கிழ... மேலும் பார்க்க