செய்திகள் :

Rohit: "அடுத்த இலக்கு இதுதான்" - டெஸ்ட் ஓய்வுக்குப் பின் எதிர்காலம் குறித்து என்ன சொல்கிறார் ரோஹித்?

post image

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2022-ல் மூன்று ஃபார்மட் அணிக்கும் கேப்டனாகப் பொறுப்பேற்ற ரோஹித் சர்மா, 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.

அதன்பிறகு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு மட்டும் கேப்டனாகச் செயல்பட்டுவந்தார் ரோஹித்.

இதில், 2024 இறுதியில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததாலும், ஆஸ்திரேலியாவுக்கெதிராக பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்ததாலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் ஓய்வுபெற வேண்டும் எனப் பேச்சுக்கள் எழுந்தன.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

இத்தகைய பேச்சுகளுக்கு மத்தியில், மார்ச்சில் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்தார் ரோஹித்.

இருப்பினும், ஜூன் மாதம் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன்சியிலிருந்து ரோஹித் நீக்கப்படுவார் என்று நேற்று (மே 7) பேச்சுக்கள் அடிபட்ட அடுத்த சில மணிநேரங்களிலேயே, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக ரோஹித் அறிவித்தார்.

அதேசமயம், தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், தனது கிரிக்கெட் கரியரில் அடுத்த இலக்கு என்ன என்பதை ரோஹித் தெரிவித்திருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் விமல் குமாருடனான நேர்காணலில் ரோஹித், "2027 ஒருநாள் உலகக் கோப்பையில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்பதே மனதில் இருக்கிறது.

கோப்பையை வெல்ல வேண்டும். அது நடந்தால் நன்றாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

அதேபோல், ரோஹித்தின் சிறுவயது பயிற்சியாளர் சித்தேஷ் லாட், "2027 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதுதான் ரோஹித்தின் இலக்கு. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் இலக்காக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறவில்லை.

இப்போது, 2027 உலகக் கோப்பையை வென்ற பின்னர் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என்று ஊடகத்திடம் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

பாகிஸ்தான் தாக்குதலால் தடைபடும் மும்பை அணியின் பயணம் - IPL சேர்மன் சொல்வதென்ன?

IPL 2025 தொடர் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலால், தாக்குதலுக்கு உள்படும் அபாயம் உள்ள தரம்ஷாலா மைதானத்தில் போட்டிகள் நடக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஐபிஎல் தலைவர் தலைவர் அருண் துமால்.பாகி... மேலும் பார்க்க

KKR vs CSK : 'ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் மாறா!' - எப்படி வென்றது சிஎஸ்கே?

'சென்னை வெற்றி!'சீசனின் க்ளைமாக்ஸில் ஒரு போட்டியை வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த சென்னை அணி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வகையில் கொல்க... மேலும் பார்க்க

Dhoni : 'கொல்கத்தாவும் என்னோட சொந்த ஊர்தான்!' - ஈடன் கார்டனில் நெகிழ்ந்த தோனி

'கொல்கத்தா vs சென்னை!'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே வென்றார். மு... மேலும் பார்க்க

Operation Sindhoor: 'ஒற்றுமையில் அச்சமற்றவர்கள்' - கிரிக்கெட் பிரபலங்களின் பதிவு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.இந்த ஆபரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத இடங்களை இந்திய இராணுவம்... மேலும் பார்க்க

Gill : 'டெஸ்ட் மேட்ச் ஆடுற மாதிரி இருந்துச்சு; ஆனால்...' - திரில் வெற்றி குறித்து கில்

"குஜராத் வெற்றி!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் நடந்து முடிந்திருக்கிறது. மழைக்கு நடுவே பல ட்விஸ்ட்களோடு நடந்து முடிந்த இந்தப் போட்டியை குஜராத் அணி DL... மேலும் பார்க்க

Hardik Pandya : 'நாங்கள் செய்திருப்பது ஒரு க்ரைம்!' - தோல்வி பற்றி ஹர்திக் பாண்ட்யா

'மும்பை தோல்வி!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் நடந்து முடிந்திருக்கிறது. மழைக்கு நடுவே பல ட்விஸ்ட்களோடு நடந்து முடிந்த இந்தப் போட்டியை குஜராத் அணி DLS... மேலும் பார்க்க