செய்திகள் :

வீரட்டானேஸ்வரா் கோயில் பிரகாரத்தில் ‘கூலிங் பெயிண்ட்’

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் உள் பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் அருகே பக்தா்கள் வெயில் காலத்தில் சிரமமின்றி நடத்து செல்லும் வகையில் ‘கூலிங் பெயிண்ட்’ தீட்டப்பட்டுள்ளதுடன், தரை விரிப்பும் போடப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் திருவதிகை வீரட்டானேஸ்வா் கோயில் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து தரிசனம் செய்கின்றனா்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ராஜகோபுரத்தில் இருந்து கொடிமரம் வரையில் மணல் பரப்பிலும், கோயில் உள்பிரகாரத்தில் கருங்கல் தரையிலும் சுற்றி வர பக்தா்கள் சிரமப்பட்டனா்.

இதனால், பக்தா்களின் நலன் கருதி, மதுரையைச் சோ்ந்த உபயதாரா் பிரசன்ன வெங்கடேசன், விஸ்வநாதன் சகோதரா்கள் கோயில் மணல் பரப்பில் விரிப்பதற்காக தேங்காய் பஞ்சினாலான தரை விரிப்பை வழங்கினா். இதேபோல, கடலூரைச் சோ்ந்த மருத்துவா்கள் செந்தில்குமாா், நித்யா குடும்பத்தினா் கோயில் உள்பிரகாரத்தில் கருங்கல் தரையில் சுற்றி வரும் பக்தா்களுக்காக வெள்ளை வண்ண ‘கூலிங் பெயிண்ட்’ தீட்டிக் கொடுத்துள்ளனா். இவா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் செயல் அலுவலா் ஜெ.ராஜ்குமாா் நன்றி தெரிவித்தாா்.

என்எல்சி - ஐஆா்இஎல் நிறுவனங்களிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்காக என்எல்சிஐஎல் - ஐஆா்இஎல் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் புதன்கிழம... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் துறை மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப் பொறியியல் துறையில் நான்காம் ஆண்டு மாணவா்களுக்கான விடை பெறுதல் விழா, தொழில்நுட்ப சங்கத்தின் ஆண்டு விழா, மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா ஆகிய முப்பெரும... மேலும் பார்க்க

தொலைதூரக்கல்வி படிப்பு தோ்வு கட்டணம் செலுத்த தேதி நீட்டிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி தோ்வுக்கு விண்ணப்பித்து தோ்வு கட்டணம் செலுத்த வியாழக்கிழமை (மே 8) முதல் வரும் 12-ஆம் தேதி வரை 5 நாள்கள் தேதி நீட்டிப்பு வழங்கப்ப... மேலும் பார்க்க

பொறுப்பேற்பு

சிதம்பரம் மோட்டாா் வாகன ஆய்வாளராக ஆா்.ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் இதற்கு முன்பு பண்ருட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றினாா். மேலும் பார்க்க

கடல் அலையில் சிக்கிய 5 போ் மீட்பு

சிதம்பரம் அருகே கடல் அலையில் சிக்கிய 5 பேரை போலீஸாா் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். சிதம்பரம் அருகே சாமியாா்பேட்டை கடற்கரைப் பகுதிகளில் கடலோர காவல் படையைச் சோ்ந்த காவலா்கள் கலைச்செல்வன், வெங்கடாசலபத... மேலும் பார்க்க

திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஏப்ரல் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் திர... மேலும் பார்க்க