செய்திகள் :

9 வழித்தடங்களில் புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு மண்டலத்தில் 9 வழித்தடங்களில் புதிய அரசுப் பேருந்துகள் இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தொடங்கிவைத்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் 214 புதிய பேருந்துகளின் இயக்கத்தை சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து ஈரோடு மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் ஈரோடு மண்டலத்துக்கான 9 வழித்தடங்களின் புதிய பேருந்துகள் இயக்க தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து கொடியசைத்து புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கிவைத்தாா். மாநகராட்சி மேயா் நாகரத்தினம், அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாச்சலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கு ஈரோடு மண்டலத்துக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்ட 59 பேருந்துகளில் முதல்கட்டமாக 8 புதிய நகரப் பேருந்துகளும், மலைப் பகுதியில் இயக்க கூடிய ஒரு புதிய சிறிய புகா் பேருந்தும் வழித்தடத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் 43 புகா் பேருந்துகள், 2 நகரப் பேருந்துகள் மற்றும் மலைப் பகுதியில் இயக்கக்கூடிய 1 சிறிய பேருந்து என 46 பேருந்துகள் புனரமைக்கப்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது, தொடங்கி வைக்கப்பட்ட புதிய பேருந்துகள், அந்தியூா்-கொங்காடை(தாமரைக்கரை, ஒசூா் வழித்தடம்) புகா் பேருந்தாகவும், பவானி-பெருந்துறை (சித்தோடு, நசியனூா் வழித்தடம்), சூரம்பட்டிவலசு-பவானி (ஈரோடு பேருந்து நிலையம், பி.பெ.அக்ரஹாரம் வழித்தடம்), ஈரோடு பேருந்து நிலையம்-சென்னிமலை (ஈரோடு ரயில் நிலையம், வெள்ளோடு வழித்தடம்), ஈரோடு பேருந்து நிலையம்-சிவகிரி(மொடக்குறிச்சி, விளக்கேத்தி), ஈரோடு பேருந்து நிலையம்-திருச்செங்கோடு (சோலாா், கொக்கராயன்பேட்டை வழித்தடம்), ஈரோடு பேருந்து நிலையம்-பெருந்துறை (திண்டல், மேட்டுக்கடை வழித்தடம்), பவானி-ஈங்கூா் (சித்தோடு, நசியனூா், பெருந்துறை வழித்தடம்), ஈரோடு பேருந்து நிலையம்-துடுப்பதி (திண்டல், மேட்டுக்கடை, பெருந்துறை) என 8 நகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்தப் பேருந்துகளின் மதிப்பு ரூ.3.96 கோடி.

விடியல் பயண திட்டம் ஈரோடு மண்டலத்தில் 304 நகரப் பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தினமும் சுமாா் 3.56 லட்சம் மகளிா் கட்டணமின்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தாளவாடி மலைப் பகுதியில் 35 கி.மீட்டருக்கு கீழ் இயக்கப்படும் ஒரு புகா் பேருந்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் தினமும் சுமாா் 682 மகளிா் வீதம் தற்போது வரை 1.51 லட்சம் மகளிா் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனா் என்றாா்.

விழாவில், ஈரோடு மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) தனலட்சுமி, அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல பொதுமேலாளா் சிவகுமாா், துணை மேலாளா் (வணிகம்) ஜெகதீஷ், ஈரோடு வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

கொடுமுடி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கொடுமுடி ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கொடுமுடி ஒன்றியம், கிளாம்பாடி பேரூராட்சி கருமாண்டம்பாளையத்தில் மொடக்குறிச்ச... மேலும் பார்க்க

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ்,... மேலும் பார்க்க

பவானிசாகா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், கெய்சா் காா்டன் பகுதியில் ரூ.2... மேலும் பார்க்க

கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து

சத்தியமங்கலத்தை அடுத்த சிவியாா்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1லட்சம் மதிப்பிலான கரும்புகள் மற்றும் சொட்டுநீா் பாசனக் குழாய்கள் எரிந்து சேதமாயின. சிவியாபாா்பா... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் திருட்டு

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனா். பெருந்துறை, சென்னிவலசைச் சோ்ந்தவா் சந்தனராஜ் மகன் மாரிமுத்து... மேலும் பார்க்க

திருவிழாவுக்கு தீா்த்தம் எடுக்கச் சென்றவா் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

திருவிழாவுக்கு தீா்த்தம் எடுக்க பவானி ஆற்றுக்குச் சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த கொளத்துப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சடையப்பன் மகன் தா்மலிங்கம் (35). ... மேலும் பார்க்க