செய்திகள் :

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

post image

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதையொட்டி அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை மணல் சிற்பம் வரைந்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பட்நாயகின் எக்ஸ் பதிவில்..

பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி ஒடிசாவின் புரி கடற்கரையில் பாரத் கி உதான் மோடி ஜி கே சாத் என்ற செய்தியுடன் 750 தாமரை மலர்களைக் கொண்ட எனது மணல் சிற்பம் என்று பதிவிட்டுள்ளார்.

பட்நாயகின் மற்றொரு பதிவில்,

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் அயராத அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன. ஜெகந்நாதர் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நாட்டிற்குப் பல ஆண்டுகள் சேவை செய்ய ஆசீர்வதிப்பாராக என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த மணற்சிற்பத்தைப் புரி கடற்கரையில் பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

தனது மணல் சிற்பங்களுக்காக சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட சுதர்சன் பட்நாயக், தேசிய மற்றும் உலகளாவிய நிகழ்வுகளைக் குறிக்க தனது கலையை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sand sculptor Sudarshan Patnaik has wished Prime Minister Narendra Modi on his birthday.

இதையும் படிக்க: இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், வெள்ளத்தில் தனது சைக்கிள் சேதமானதற்கு அழுத 6 வயது சிறுவனுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதிய சைக்கிளை பரிசளித்துள்ளார். பஞ்சாபில் வெள்ளத... மேலும் பார்க்க

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புகள் பற்றிய கதையை பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து பகிர்ந்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, சர்வதேச தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகித ஜிஎஸ்டி முறையை 5%... மேலும் பார்க்க

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

கர்நாடகத்தில் யூ டியூப் சேனல்கள் தொடங்கவும் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை கர்நாடக அரசு பரிசீலனை செய்து வருகிறது. கர்நாடகத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மின்னணு ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில், 2 பெண் நக்சல்கள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். எட்டப்பள்ளி தாலுக்காவில் உள்ள மொடாஸ்கே கிராமத்தின் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதா... மேலும் பார்க்க

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

சுதந்திர இந்தியா 100 வயதை அடையும் போதும், இந்தியாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி பணியாற்ற வேண்டும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை... மேலும் பார்க்க