செய்திகள் :

Asia Cup 2025: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ் - நடந்தது என்ன?

post image

துபாய் சர்வதேச மைதானத்தில் ஆசியக் கோப்பை 2025-க்கான இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் மைதானத்தை நிரப்பியுள்ளனர்.

இரண்டு கேப்டன்களுக்கும் உற்சாகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் டாஸின்போது வழக்கமான செயல்முறையின்படி இருவரும் கைகொடுத்துக்கொள்ளவில்லை.

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா இருவரும் தங்களது அணியினரின் பட்டியலை நடுவரிடம் கொடுத்துவிட்டு, வர்ணனையாளர் ரவி சாஸ்திரியிடம் பேசிவிட்டு உடை மாற்றும் அறைக்குச் சென்றுள்ளனர்.

Team India

இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் கூறுவதன்படி, சூர்யகுமார் யாதவ் இன்று காலையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான் நிச்சயமாக கைகுலுக்கப் போவதில்லை என்று தனது அணியினருக்கு சூர்யா தெரிவித்ததாகவும், போட்டியின் முடிவில் கை குலுக்கப் போவதில்லை என்று அவர் கூறியதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

suryakumar yadhav.jpeg

இன்றைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு கடந்த சில நாள்களாக ஆன்லைனில் எதிர்ப்புகள் இருந்தன.

பகல்ஹாம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பெரும் சரிவை சந்தித்திருக்கின்றன. அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று கூறியதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன. வட இந்தியாவின் சில பகுதிகளில் போராட்டங்களும் எழுந்தன.

இதற்கு முன்னரும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இணைந்து விளையாடுவதைத் தவிர்த்திருக்கின்றன. இதைவிட அழுத்தமான போருக்குப் பிறகான சூழலில் விளையாடியிருக்கின்றன.

surya kumar yadhav
surya kumar yadhav

ஆனால் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைத் தவிர எப்போதும் கை குலுக்குவதைத் தவிர்த்தது இல்லை என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம்.

கடும் பரபரப்புக்கு நடுவில் இந்த போட்டி நடைபெற்றாலும், சாதாரண அளவை விட சில காவலர்களே கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரசிகர்களும் ஒன்றாக அமர்ந்து போட்டியை ரசிப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்திருக்கிறது.

The Ashes: ``நான் நிர்வாணமாக வலம் வருகிறேன்'' - வைரலாகும் முன்னாள் கிரிக்கெட் வீரரின் சவால்!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடக்கும் புகழ்பெற்ற தொடர் ஆஷஸ் டெஸ்ட் (The Ashes). நமக்கு ஐபிஎல் போல ஆஸ்திரேலியாவுக்கு ஆஷஸ் தொடர் மிகவும் பிரபலம். இந்தத் தொடர் நவம்பர் மாதம் நடக்கவிருக்க... மேலும் பார்க்க

Ashes: "ஆஷஸ் சீரிஸ்ல ரூட் இத பண்லனா மெல்போர்ன் கிரவுண்டுல இத செய்யுறேன்..!" - சவால் விட்ட ஹைடன்

கிரிக்கெட் பரிணாம வளர்ச்சி டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பித்து 60 ஓவர் ஒருநாள் போட்டி, 50 ஓவர் ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி, 10 ஓவர் போட்டி, 100 பந்துகள் போட்டி என எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.ஆனாலும், ... மேலும் பார்க்க

BCCI: ``பிசிசிஐ தலைவர் பதவிக்கு தேர்தல் இருக்காது; ஆனால்'' - IPL தலைவர் கொடுத்த அப்டேட் என்ன?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக 2022 அக்டோபர் முதல் செயல்பட்டு வந்த ரோஜர் பின்னி, கடந்த ஜூலைவில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் முடிவுக்... மேலும் பார்க்க

Sachin: `அடுத்த பிசிசிஐ தலைவர் நானா?' - சச்சின் தரப்பு கொடுத்த விளக்கம் என்ன?

சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து சச்சின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.பிசிசிஐ தலைவர் பதவியை வகித்து வந்த 70 வயதுடைய ரோஜர் பி... மேலும் பார்க்க

ட்ரம்ப்பின் நண்பர் கொலையைத் தொடர்ந்து RCB Ex கேப்டன் எழுப்பிய முக்கிய கேள்வி; என்ன கேட்கிறார்?

அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரின் கைகளிலும் துப்பாக்கி எளிதாகப் புழக்கத்தில் இருக்கிறது.இந்த ஆபத்தான துப்பாக்கி கலாசாரத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.இத்தக... மேலும் பார்க்க

Sachin: பிசிசிஐ-யின் அடுத்த தலைவர் சச்சின் டெண்டுல்கரா... செப்டம்பர் 28-ல் முக்கிய அறிவிப்பு!

முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரோஜர் பின்னி கடந்த 2022 அக்டோபரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராகப் பொறுப்பேற... மேலும் பார்க்க