செய்திகள் :

Doctor Vikatan: குழந்தைகளுக்கு இருமல், ஆயுர்வேத இருமல் மருந்துகள் பாதுகாப்பானவையா?

post image

Doctor Vikatan: இருமல் மருந்து குடித்த பல குழந்தைகள் மரணமடைந்தது குறித்து சமீபத்தில் செய்தியில் பார்த்தோம். குழந்தைகளுக்கு இருமல் வந்தால் அதை எப்படி அணுக வேண்டும். ஆயுர்வேத இருமல் மருந்து கொடுக்கலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் சஃபி

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

ஒருவருக்கு என்ன நோய் வந்தாலும், முதலில் அறிகுறிகளைக் காட்டும். அந்த வகையில், குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகளுக்கு இருமல் என்பது மிக முக்கியமான அறிகுறி.

குழந்தைகளுக்கு இருமல் வரும்போது, அது சுவாசக்குழாயில் உள்ள அடைப்பின் காரணமாக வருகிறதா அல்லது நெஞ்சில் சளி கட்டியிருப்பதால் இருமல் வருகிறதா அல்லது நிமோனியா அல்லது பிராங்கோ நிமோனியா அல்லது பிராங்கோலைட்டிஸ் போன்ற பிரச்னைகளின் காரணமாக சளி கட்டியதால் இருமல் வருகிறதா, சாதாரண வைரஸ் தொற்றின் காரணமாக, பருவகால தொற்றின் காரணமாக இருமல் வருகிறதா அல்லது அலர்ஜி எனப்படும் தொடர் ஒவ்வாமையால் இருமல் வருகிறதா, ஆஸ்துமாவின் அறிகுறிகள் தென்படுவதால் இருமல் வருகிறதா என்ற விஷயங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைக்கு ஏற்பட்டது எந்த வகையான இருமல் என்பதை குழந்தைகள் நல மருத்துவர்தான் தீர்மானிப்பார். அதற்கு எந்த வகையான மருந்து கொடுக்க வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வார்.

இருமலை உடனடியாக நிறுத்தும் சிரப்பை 'ஆன்டி டிஸ்ஸிவ்' சிரப் என்று சொல்வோம். இருமலை அப்படி உடனடியாக நிறுத்தக்கூடாது. அது எந்தவகையான இருமல் என்று கண்டறிந்து, அதற்கான மூல காரணமான நோயைத்தான் நாம் சரிசெய்ய வேண்டும்.

எந்தவகையான இருமல் என்று கண்டறிந்து, அதற்கான மூல காரணமான நோயைத்தான் நாம் சரிசெய்ய வேண்டும்.

உதாரணத்துக்கு, பொதுவான தொற்று, தூசு அலர்ஜி, வைரஸ் தொற்று என எந்தக் காரணத்தால் ஏற்பட்டதோ அதைக் குணப்படுத்த வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்காமல், டிராப்ஸ் தருவோம். அதுவும் அனுபவம் வாய்ந்த மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும்.

ஆயுர்வேத இருமல் மருந்து என்பவை எந்த அளவுக்குத் தரமாக, முறையாகத் தயாரிக்கப்படுகின்றன என்ற விவரங்கள் தெரிய வேண்டும். எனவே, அதெல்லாம் தெரியாமல் ஆயுர்வேத மருந்துகள் என்றாலே பாதுகாப்பானவை என்ற நம்பிக்கையில் அவற்றைக் கொடுக்க வேண்டாம்.

மற்றபடி குழந்தைகளுக்கு தினமும் காலையில் சிறிதளவு சுத்தமான தேன் கொடுத்தாலே போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

தலையணை உறையா அல்லது பாக்டீரியா காலனியா? எச்சரிக்கும் மருத்துவர்!

தூங்கும்போது தலையணை எந்த அளவுக்கு இன்றியமையாததோ, அதேபோல் அதன் தூய்மையும் இன்றியமையாதது.அமெரிக்காவின் நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், ஒரு வாரம் துவைக்காமல் பயன்படுத்தப்படும் த... மேலும் பார்க்க

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு காப்பர்-டி பாதுகாப்பானதா? - தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!

பிரேசிலில் தனது தாயின் கருத்தடை சாதனத்தை (காப்பர்-டி) கையில் ஏந்தியபடி ஒரு குழந்தை பிறந்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தையும் சமூக ஊடகங்களில் விவாதங்களை... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரவில் சோறு, வாழைக்காய், உருளைக்கிழங்கு சாப்பிட்டு படுத்தால் உடல்வலி வருகிறது ஏன்?

Doctor Vikatan: என் வயது 44. இரவில் சோறு, வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றைச் சாப்பிட்டுப் படுத்தால், மறுநாள் காலை எனக்கு கடுமையான உடல்வலிஏற்படுகிறது. நெஞ்சுப்பகுதி, தோள்பட்டையில் வலி அதிகமிருக்கி... மேலும் பார்க்க

Doctor Vikatan: சித்த மருந்துகளில் போலி; தரமான மருந்துகளை எங்கே வாங்குவது, எப்படி உறுதிசெய்வது?

Doctor Vikatan: சித்த மருந்துகளை வாங்கும்போது, பல கடைகளிலும் போலியான மருந்துகளைக் கொடுத்து ஏமாற்றுவதாகக் கேள்விப்படுகிறோம். அரசு அங்கீகாரம் பெற்ற மையங்களில் மட்டுமே சித்த மருந்துகளை வாங்க வேண்டுமா? அவ... மேலும் பார்க்க

Exercise: "உடற்பயிற்சி நல்லதுதான்; ஆனால்" - இந்த 3 விஷயங்களில் கவனமா இருங்க!

உடலில் நோய் வராமல் இருக்கவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும்தான் உடற்பயிற்சி செய்கின்றோம். கூடவே, உடல் எடையைக்குறைக்கவும் உடற்பயிற்சி செய்கிறோம். அப்படிப்பட்ட உடற்பயிற்சியைச் சரியான முறையில் அல்லது சூழல... மேலும் பார்க்க

Doctor Vikatan: `குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை கருத்தரிக்காது' என்கிறார்களே, அது உண்மையா?

Doctor Vikatan: எனக்குக் குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆகின்றன. தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். தாய்ப்பால் கொடுக்கும் வரை பீரியட்ஸ் வராது என்றும், அந்தக் காலத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கரு... மேலும் பார்க்க