செய்திகள் :

Health: சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுகிறீர்களா? என்னவெல்லாம் பாதிப்புகள் வரும் தெரியுமா?

post image

ரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் ஒத்திவைப்பது, தூங்காமல் இருப்பது பற்றிப் பார்த்திருக்கிறோம். சிறுநீர் கழித்தலை ஒத்திப்போடுகிறவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இன்றைக்கு நகர்ப்புறங்களில் பொது கழிப்பறைகளே இல்லை. அப்படியே இருந்தாலும் அதன் சுகாதார சீர்கேடு காரணமாக உள்ளே நுழையக் கூட முடியாத நிலை, வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் பலரும் சிறுநீர் கழிப்பதை முடிந்தவரைத் தள்ளிப்போடுகின்றனர்.

எல்லா வேலையும் முடிந்தபிறகு செய்ய வேண்டிய கடைசி வேலையாகத்தான் அது இருக்கிறது. உண்மையில், இது மிகவும் ஆபத்தான பழக்கம் என்கிறார் சிறுநீரக நிபுணர் பாரி.

சிறுநீரகம்

அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ளது. இது ரப்பர் பந்துபோல சுருங்கி விரியும் தன்மை கொண்டது. சிறுநீரகத்திலிருந்து `யூரேட்டர்’ எனும் மெல்லிய குழாய் (Ureter) வழியாகச் சிறுநீர், சிறுநீர்ப் பையை அடைகிறது.

`யூரித்ரா’ (Urethra) எனும் குழாய் வழியாகச் சிறுநீர் வெளியேறும். சிறுநீர் கழித்தவுடன், சிறுநீர்ப்பை சுருங்கி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

பொதுவாக ஐந்து முதல் பத்து வயதுள்ள சிறுவர்களால் 100-150 மி.லி சிறுநீரைச் சேமிக்க முடியும். உடல் வளர்ச்சி அதிகமாக, சிறுநீர்ப்பையில் சிறுநீரின் கொள்ளளவும் அதிகரிக்கும்.

22-25 வயதில் சிறுநீர்ப்பையின் வளர்ச்சி நின்றுவிடும். இந்த வயதில் சராசரியாக 350-400 மி.லி சிறுநீரைச் சிறுநீர்ப்பை தேக்கிவைக்கும்.

சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைத்தால், சிறுநீர்ப்பை விரிவடைந்து கொண்டே செல்லும். பல மணி நேரங்கள் அடக்கி வைத்து சிறுநீர் கழிப்பவர்களுக்குச் சிறுநீர் முழுவதுமாக வெளியேறாது. விட்டு விட்டுத்தான் வெளியேறும்.

இதே பழக்கம் தொடர்ந்தால், சிறுநீர்ப் பையின் சுருங்கி விரியும் தன்மை குறைந்துவிடக்கூடும். சிறுநீரை அடக்குவதால், சிறுநீரில் உள்ள உப்பு படிமம் சிறு சிறு படிவங்களாகச் சேர்ந்து கற்களை உருவாக்கும். பிறகு, இந்தக் கற்கள் சிறுநீர்ப் பாதையை அடைத்துக் கொள்ளும்.

சிறுநீரகம்

பொதுவாக, வயதான ஆண்கள், சிறுநீரை அடக்குவர். இதனால், புராஸ்டேட் சுரப்பியில் தொற்று காரணமாக வீக்கம் (Prostatitis) ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த வீக்கத்தால் இவர்களுக்குச் சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினாலும், முழுதாக சிறுநீர் வெளியேறாது.

10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். அரிதாக, இந்த வீக்கம் மலக்குடலையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

சிறுநீரை அடக்குவதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் பேர் உள்ளனர். பயணங்களின்போது, பெண்கள் சிறுநீரை வெளியேற்றக் கழிப்பறைகள் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் பெண்களுக்குச் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுகிறது.

கர்ப்பிணி

கர்ப்பிணிகள் சிறுநீரை அடக்குவதால், கருவின் தலை பகுதி சிறுநீர்ப்பையை அழுத்த வாய்ப்புள்ளது. இதனால் வயிற்று வலி, சிறுநீர் போகிற இடங்களில் வலி எனத் தேவையில்லாத பிரச்னைகள் வரக்கூடும்.

சிறுநீர் வருமோ என்று குறைவாக நீர் அருந்தும்போது, நீர் வறட்சி (Dehydration), சோர்வு, தலைவலி, சருமப் பிரச்னைகள், உடல் உஷ்ணம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

இயற்கைக் கழிவுகளை அடக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். சிறுநீரோ, மலமோ கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்த உடனே, கழித்துவிட வேண்டியது அவசியம்.

இயற்கையைத் தடுத்து நிறுத்துவது உடலுக்கு நீங்கள் செய்யும் தீங்கு.

கிட்னி

எந்த முக்கிய இடங்களிலும் ‘எக்ஸ்கியூஸ்’ கேட்கலாம் என்பதை மனதில் நிறுத்துங்கள். வெளியிடங்களுக்குச் செல்லப் போகிறோம் என்றால், சிறுநீர் வருமோ எனத் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். ஒருநாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிப்பது அவசியம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Mayonnaise: `மையோனைஸை விற்க, வாங்க, சேமித்து வைக்க தடை...' - தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெளிநாட்டு உணவுகள் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக தந்தூரி, பார்பிகியூ, சவர்மா எனப் பல்வேறு அரேபிய உணவுகளுக்கான கடைகள் வீதிகள்தோறும் இருக்கிறது. இந்த உண... மேலும் பார்க்க

Health: 20களில் கருத்தரித்தால்தான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா? மருத்துவர் சொல்வது என்ன?

உயர் கல்வி, வேலையில் அடுத்தகட்ட வளர்ச்சி, ஆன்சைட் என இந்தக் காலப் பெண்கள் தங்கள் கரியர் மீது மிகுந்த காதலுடன் இருக்கிறார்கள்.அதே காலகட்டத்தில் திருமணம், குழந்தை எனத் திட்டமிட்டால் அது தங்கள் கரியரில் ... மேலும் பார்க்க

தனியாக பேசுவது இயல்பா? மனநோயின் அறிகுறியா? - உளவியல் நிபுணர் எச்சரிப்பது என்ன?

நம்மில் பலருக்கு தனியாக பேசிக்கொள்ளும் பழக்கம் இருக்கும். ஒரு நாளில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று இரவில் தூங்கும் போது அதனை சிந்தித்துப் பார்ப்போம். பின்னர் அது குறித்து ஆழ்ந்த யோசித்து தங்களிடம் பே... மேலும் பார்க்க

Health: நாம் ஏன் தினமும் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்? நிபுணர் சொல்லும் விளக்கம் இதான்!

சரிவிகித உணவு என்பது மனித உடலுக்குத் தேவையான அனைத்து அடிப்படைச் சத்துக்களையும் கொடுப்பதாகும். சரிவிகித உணவு மற்றும் அதன் நன்மைகள் குறித்தும், சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாததால் வரும் விளைவுகள் குறித்... மேலும் பார்க்க

Health: அடிக்கடி கிரில்டு சிக்கன் சாப்பிடுறீங்களா? மருத்துவர் எச்சரிப்பது என்ன?

அசைவ உணவகங்களில் ஆவி பறக்க... சுடச்சுட... தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும்.தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில... மேலும் பார்க்க

Helmet: உங்களுக்கு ஏற்றபடி ஹெல்மெட் வாங்குவது முதல் பராமரிப்பு வரை..!

போலீஸ் கெடுபிடிக்குப் பயந்து ஹெல்மெட் அணிபவர்களே அதிகம்! நாம் வேண்டாவெறுப்பாக ஹெல்மெட் அணிந்தாலும், அது என்னவோ நம்மைக் காக்கும் வேலையைச் செய்துகொண்டே இருக்கிறது. கடும் வெயிலில், வியர்வையில் குளிப்போம்... மேலும் பார்க்க