செய்திகள் :

Kamal Haasan: நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினராக கமல் ஹாசன் நியமனம்

post image

தமிழகத்தில் முன்பு இருந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 24 அன்று நிறைவடைந்தது. இதில், திமுக சார்பில் 4 எம்.பி.க்கள் இடங்களும், அதிமுக சார்பில் 2 எம்.பி.க்கள் இடங்களும் இருந்தன.

கமல்ஹாசன் - ஸ்டாலின்
கமல்ஹாசன் - ஸ்டாலின்

இதில், திமுக சார்பில் வில்சன், சிவலிங்கம், சல்மா, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் எம்.பி.க்களாக தேர்வாகினர்.

ஜூலை 25 ஆம் தேதி திமுக சார்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதி ஏற்றுப் பதவி ஏற்றுக் கொண்டார்.

"மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசன் எனும் நான் சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசின் சட்டத்தின் மீது உண்மையான பற்று ஆர்வமும், பற்றுவதையும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் உறுதியேற்கிறேன்" எனத் தமிழில் கூறி பதவி ஏற்றார்.

நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் பதவியேற்ற போது...
நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் பதவியேற்ற போது...

இந்நிலையில் தற்போது கமல் ஹாசன் நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்காதது ஏன்?

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் 64 வயதாகும் சனே தகைச்சி. மேலும் அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.ஜப்பான் சர்வதேச அளவில் பாலின ... மேலும் பார்க்க

கரந்தை: `நாங்களும் கொடுக்காத மனு இல்ல பாக்காத ஆள் இல்ல' சிதைந்த படித்துறையை சீரமைக்க கோரும் மக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் உள்ள வடவாறு படித்துறை கடந்த எட்டு வருடமாக சிதைந்து கிடக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்... மேலும் பார்க்க

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? - ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவாகி ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது... மேலும் பார்க்க

உங்களது வாகனத்தில் ஃபாஸ்ட் டேக் இல்லையா? பிரச்னையே இல்லை; மத்திய அரசு அறிவித்த புதிய நடைமுறை

பணமாக அல்லாமல், டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என்று தான் ஃபாஸ்ட் டேக் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை 2021-ம் ஆண்டு முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் பய... மேலும் பார்க்க

இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்? ஒப்புக்கொண்ட ஹமாஸ்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு என்ன?

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்திற்காக 20 பரிந்துரைகளைப் பரிந்துரைத்திருந்தார். ஹமாஸின் ஒப்புதல் ஐ.நா பொதுசபைக்காக, அப்போது அமெரிக்கா சென்... மேலும் பார்க்க