செய்திகள் :

Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு

post image

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) இந்தியா கூட்டணி கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக பேசி உள்ளார்.

பீகார் மாநிலம் சக்கரா பகுதியில் நடந்த பாஜக ஊர்வலத்தில் பேசிய அவர் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி 2022ஆம் ஆண்டு "நான் பீகார் மக்களை உள்ளே விடமாட்டேன்" எனப் பேசியதை சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் பேசியபோது பிரியங்கா காந்தி அந்த மேடையில் இருந்ததாகவும் அவரது பேச்சைக் கேட்டு சிரித்ததாகவும் மோடி பேசி உள்ளார்.

Rahul Gandhi and Tejashwi Yadhav
Rahul Gandhi and Tejashwi Yadhav

Modi பேசியது என்ன?

"நண்பர்களே விளக்குடன் இருப்பவர்களும் (RJD சின்னம்) கையும் (Congress சின்னம்) அவர்களின் இந்தியா கூட்டணியும் பீகார் மக்களை எப்படி அவமதித்தனர் என்பதை நான் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

பஞ்சாபின் முதலமைச்சர் வெளிப்படையாக பீகார் மக்களை உள்ளே விட மாட்டேன் என கூறினார். பொதுவெளியில் அவர் இப்படி பேசியபோது காந்தி குடும்பத்தின் மகளும் தற்போது நாடாளுமன்றத்தில் இருப்பவரும் மகிழ்ச்சியாக கையை தட்டிக் கொண்டிருந்தார்." என்றார் மோடி.

மோடி
மோடி

தொடர்ந்து பேசிய அவர், "இதற்கிடையில், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர்கள் பீகார் மக்களை அவமதிக்கின்றனர், மேலும் தமிழ்நாட்டில், திமுக பீகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளி மக்களை தவறாக நடத்துகிறது. இவை அனைத்துக்கும் இடையே, பீகாரில் உள்ள ஆர்ஜேடி மௌனமாக, பேச்சு மூச்சற்றது போல இருக்கிறது. இந்த முறை, இந்த தேர்தல்களில், அவர்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டனர்.

பீகாரை தங்கள் மாநிலங்களில் அவமதித்த அதே காங்கிரஸ் தலைவர்களை இப்போது ஆர்ஜேடி இங்கு பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளது. இது காங்கிரஸின் கணக்கிடப்பட்ட சதி - அவர்கள் ஆர்ஜேடிக்கு அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றனர். ஆர்ஜேடி - காங்கிரஸ் இடையேயான பிளவு எவ்வளவு ஆழமானது என்பதை இது காட்டுக்கிறது." எனக் கூறியுள்ளார்.

பீகாரில் வருகின்ற நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 14ம் தேதி முடிவுகள் வெளியாகும்.

Delhi Blast: "அந்தக் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன" - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: மும்பை, சென்னை, கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு; நிலைமையை ஆராயும் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல... மேலும் பார்க்க

Delhi Blast: 8 பேர் பலி; மோடி ஆய்வு; நாடு முழுவதும் பதற்றம்! | Live

தமிழகத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்புதமிழகத்தில் பாதுகாப்பு சோதனைகள்"டெல்லி பாதுகாப்பில் அலட்சியம்" - அரவிந்த் கெஜ்ரிவால் கவலைமுன்னாள் Delhi முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "ரெட் ஃபோர்ட் அருகே வெட... மேலும் பார்க்க

TN -ல் SIR -ஐ எதிர்க்கும் BJP, ஆதரித்து வழக்கு தொடுத்த ADMK | ECI EPS STALIN TVK | Imperfect Show

* SIR: "வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்* “SIR படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும்” -எடப்பாடி பழனிசாமி* CAA-NRC-ஐ ஆதரித்த அ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை; கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்" - ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் டி எம் எஸ் எஸ் பள்ளியில் காணொளி காட்சி மூலம் அன்புச் சோலை திட்டத்தை (முதியோர் பராமரிப்பு மையத்தை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்... மேலும் பார்க்க