செய்திகள் :

"RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியும் வேதனையும்..." - நிவாரணம் அறிவித்த அணி நிர்வாகம்!

post image

RCB அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதையடுத்து, பெங்களூருவில் மிகப் பெரிய கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்பட்டது.

இதில் பங்கெடுக்க லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதனால் நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். சுமார் 47 பேர் படுகாயமடைந்தனர்.

கொண்டாட்ட நிகழ்வுக்கு சரியான திட்டமிடல் இல்லாததே உயிரிழப்புகளுக்குக் காரணம் என எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் விமர்சித்து வருகின்றனர்.

bengaluru Stampede
bengaluru Stampede

இதற்கிடையே நேற்றைய தினம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்" என அறிவித்துள்ளார்.

மேலும் நேற்று இரவில் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று ஆர்சிபி அணி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்துக்கும் தலா 10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RCB
RCB

இதுகுறித்து அணி நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "பெங்களூருவில் நேற்று நடந்த துரதிஷ்டவசமான சம்பவம் RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மீதான மரியாதை மற்றும் துன்பத்தில் பங்கெடுப்பதன் அடையாளமாக 11 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிதி உதவி அளிப்பதாக RCB அறிவித்துள்ளது.

மேலும், நேற்றைய நிகழ்வில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக ஆர்.சி.பி கேர்ஸ் (RCB Cares Fund) என்ற நிதியும் உருவாக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் எங்கள் ரசிகர்களே மையமாக இருப்பார்கள். துக்கத்திலும் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்." எனக் கூறப்பட்டுள்ளது.

Piyush Chawla: `17 வயதில் இந்திய அணி; 2 உலகக் கோப்பை..!' - ஓய்வை அறிவித்த IPL லெஜெண்ட்

இந்திய டெஸ்ட் அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் (17) அறிமுகமாகி, கடந்த தசாப்தங்களில் 2 உலகக் கோப்பை, ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் போன்ற சாதனைகளைப் படைத்த சுழற்பந... மேலும் பார்க்க

Rohit: "ODI-ல் 264 அடித்தபோது என் தந்தை உற்சாகப்படவில்லை; ஆனால் டெஸ்ட்டில்..." - நெகிழும் ரோஹித்

இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த மூன்று முக்கிய கேப்டன்களில் ஒருவர் ரோஹித் சர்மா.தனது தலைமையில் இந்திய அணியை 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை,... மேலும் பார்க்க

IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன் கில்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர் திட்டவட்டம்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம்பீர் ஓப்பன் டாக்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

RCB: "கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம்; இனிமேல் அணி வெற்றிபெற்றால்..." - கபில்தேவ் அறிவுரை

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவசர அவசரமாக அடுத்தநாளே (ஜூன் 4), சட்டமன்ற வளாகத்தில் அர... மேலும் பார்க்க