செய்திகள் :

Train Accident : கவரப்பேட்டை ரயில் விபத்து ஒரு சதியா? - வெளியான `ஷாக்' தகவல்

post image
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே கடந்த 11-ம் தேதி கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து தர்பங்காவிற்கு செல்ல இருந்த ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் விபத்திற்குள்ளாகி இருந்தது.

லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டது, உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் ஏசி பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பெட்டிகள் தடம் புரண்டது. சுமார் 19-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கவரைப்பேட்டை ரயில் விபத்து

இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக தொடர்ச்சியாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லூப் லைனின் சந்திப்பில் உள்ள போல்ட் நட்டுகள் கழற்றப்பட்டுக் கிடந்ததுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் லூப் லைனின் போல்ட் நட்டுகள் சதிச் செயல் காரணமாக கழட்டப்பட்டதா? என்ற கேள்விகள் இருந்து. இந்நிலையில் திட்டமிடப்பட்டு லூப் லைனின் போல்ட் நட்டுகள் கழற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஏற்கெனவே நான்கு பிரிவுகளில் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கவரைப்பேட்டை ரயில் விபத்து

உயிருக்கு அல்லது உடலுக்கு காயத்தை ஏற்படுத்துவது 125a, 125b, அதிவேகமாக இயக்குதல்-281, ரயில்வே பாதுகாப்பு சட்டம்-154 ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணை முடிவில் போல்ட் நட்டுகள் திட்டமிட்டு கழற்றப்பட்டுள்ளதால் இது சதிச் செயல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற பிரிவில் இந்திய ரயில்வே சட்டத்தின் 150வது பாதுகாப்பு சட்டப்பிரிவு தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY

துணை முதல்வர் நிகழ்ச்சி நடந்த இடத்தில், பைக்கில் வட்டமடித்து சத்தமிட்ட தவெக-வினர்... சேலம் சலசலப்பு!

தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கொங்கு மண்டலம் இருந்து வருகிறது. ஏற்கெனவே கொங்கு மண்டலம் தனது கோட்டை என்று சொல்லி வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு செக் வைக்கும் விதமாக, தி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: தமிழருக்கு மீண்டும் வாய்ப்பு; 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த பாஜக!

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு ஆளும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து ப... மேலும் பார்க்க

`மாவட்டத் தலைவர்கள் மாற்றம்?' - சத்தியமூர்த்தி பவனில் `புது' சலசலப்பு!

சொதப்பலில் முடிந்த நிர்வாகிகள் சந்திப்பு, பிசுபிசுத்துப் போன நடைப்பயணம் என தமிழக காங்கிரஸில் ஏற்கெனவே ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், 'தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக்க துடித்து வருகிறார்,... மேலும் பார்க்க

`ஒரு மொழியை படி, படிக்காதே எனச் சொல்ல இங்கு யாருக்கும் உரிமை இல்லை!' - விஜய பிரபாகரன் கூறுவதென்ன?

``எந்த மொழியும் குறைவானது அல்ல, அவரவருக்கு அவரவர் மொழி பெரியது, நாம் அனைத்து மொழியையும் கற்றறிய வேண்டும்" என தே.மு.தி.க விஜய பிரபாகரன் கூறியிருக்கிறார்.தே.மு.தி.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ... மேலும் பார்க்க

Vijay: "வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று..." - தவெக தலைவரின் இரண்டாவது கடிதம்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களுக்கான இரண்டாவது கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் ... மேலும் பார்க்க

India - Canada : மோசமடையும் இந்தியா - கனடா உறவு... இந்த விவகாரத்தில் லாரன்ஸ் பெயர் அடிபடுவது ஏன்?

லாரன்ஸ் பிஷ்னோய் என்றால் இன்றைக்கு பாலிவுட்டில் ஒரு அச்சம் ஏற்படும் அளவுக்கு நிலைமை உருவாகி இருக்கிறது. பஞ்சாப்பில் பாடகர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளால் அச்சத்தில் வாழ்கின்றனர். இப்போது அதே நிலையை... மேலும் பார்க்க