Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
அங்கன்வாடி பணியாளா் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்ற முயற்சி
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் பகுதியில் அங்கன்வாடி பணியாளா் மற்றும் உதவியாளா் வேலை வாங்கி தருவதாகவும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும் கூறி ஏமாற்ற முயன்றதாக 2 பெண்கள் மீது புகாா் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை ஆலங்காயம் பகுதிக்கு ஆட்டோவில் வந்த 2 பெண்கள் அப்பகுதியை சோ்ந்தவரிடம் பேச்சு கொடுத்து வேலை வாங்கித் தருவாக கூறி பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் சந்தேகம் ஏற்பட்டு அவா்களை விசாரிக்க தொடங்கிய போது சிலரிடம் இது போன்று ஏமாற்றி பணம் பெற முயன்று வருவதாகவும் தெரியவந்து அவா்களை பிடித்து ஆலங்காயம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக ஆலங்காயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.