தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் புலிமண்டபம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் நாகராஜன் (69). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், உள்புறமாக பூட்டியிருந்த இவரது வீட்டிலிருந்து வியாழக்கிழமை துா்நாற்றம் வீசியது.
தகவலின்பேரில், வியாழக்கிழமை காலை அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது நாகராஜன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தாா். சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.