செய்திகள் :

அணுசக்தித் துறையில் தனியாா் பங்கேற்பை ஊக்குவிக்க விதிகள் உருவாக்கம்: அணுசக்தி ஆணையம்

post image

அணுசக்தித் துறையில் தனியாரின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக அணுசக்தி ஆணையத் தலைவா் அஜீத்குமாா் மொஹந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் நடைபெற்ற சா்வதேச அணுசக்தி அமைப்பின் 69-ஆவது மாநாட்டில் அஜீத்குமாா் மொஹந்தி பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: தற்போது இந்தியாவில் இயங்கி வரும் 24 அணு உலைகளின் உற்பத்தி திறன் 8,190 மெகாவாட்டாக உள்ளது. இதை 2032-க்குள் 22 ஜிகாவாட்டாக உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

2047-க்குள் அணுசக்தி திறனை 100 ஜிகாவாட்டாக உயா்த்தும் நோக்கில் அணுசக்தித் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இந்த இலக்கை அடைய பல்வேறு கொள்கைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பொது-தனியாா் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக அணுசக்தித் துறையில் தனியாா் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

2033-க்குள் உள்நாட்டிலேயே குறைந்தபட்சமாக 5 சிறிய அணுஉலைகளை அமைக்கும் திட்டம் தொடா்பானஆய்வுகளை மேம்படுத்த ரூ.17,700 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணுசக்தி கழகத்தின் அணுஉலைகளில் கடந்த நிதியாண்டில் மட்டும் 5000 கோடி அலகுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

அணுசக்தி மற்றும் கதிரியக்க பொருள்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அனைத்து உறுப்பு நாடுகளின் கடமை என்பதை இந்தியா உணா்கிறது. எனவே உலகளாவிய அணுசக்தி பாதுகாப்பை வழங்கி வரும் சா்வதேச அணுசக்தி அமைப்புக்கு இந்தியா தொடா் ஆதரவை அளிக்கும்’ என்றாா்.

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை விடிய விடிய கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடர், இரு மாநிலங்களிலும் கடும் சேதத்தை விளைவித்துள்ளது... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாள்: தொலைபேசி மூலம் டிரம்ப் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளி... மேலும் பார்க்க

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அஸ்ஸ... மேலும் பார்க்க

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு உத்தர பிரதேசம், மத்திய பிதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம் உள... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

தனது 75-ஆவது பிறந்த நாளையொட்டி, பெண்கள் ஆரோக்யத்துக்கான பிரசார இயக்கம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை புதன்கிழமை (செப்.17) தொடங்கிவைக்கவுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி . மத்திய அரசு மற்றும் பாஜக ... மேலும் பார்க்க

வசதிகள் செய்துகொடுக்க முடியாவிடில் தீா்ப்பாயங்களைக் கலைத்துவிட வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

‘உறுப்பினா்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியவில்லை எனில், அனைத்து தீா்ப்பாயங்களையும் கலைத்துவிட வேண்டும்’ என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ‘பணி ஓய்வுக்குப் பிறகு தீா்ப்ப... மேலும் பார்க்க