செய்திகள் :

அதிக ரன்கள் குவித்து ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி!

post image

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.

ரிக்கி பாண்டிங் சாதனை முறியடிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து மூன்றாமிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 27,503* ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு முன்பாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்திலும், இலங்கை வீரர் குமார் சங்ககாரா 28,016 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 5 வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 34,357 ரன்கள்

குமார் சங்ககாரா (இலங்கை) - 28,016 ரன்கள்

விராட் கோலி (இந்தியா) - 27,503* ரன்கள்

ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 27,483 ரன்கள்

மஹேலா ஜெயவர்த்தனா (இலங்கை) - 25,957 ரன்கள்

திடலில் அத்துமீறி நுழைந்தவருக்கு வாழ்நாள் தடை..! பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்!

ராவல்பிண்டி திடலில் அத்துமீறி நுழைந்த நபரால் சாம்பியன்ஸ் டிராபியில் பாதுகாப்பை பலப்படுத்த பிசிபி முடிவெடுத்துள்ளது.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்துகின்றன. நடப... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு உதவிப் பயிற்சியாளரை அந்த அணி நிர்வாகம் இன்று (பிப்ரவரி 25) நியமித்துள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.-தெ.ஆ. போட்டி ரத்து!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸி. தெ.ஆ. போட்டி மழையினால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த 7ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணி... மேலும் பார்க்க

ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!

சாம்பியன்ஸ் டிராபியில் மழையின் காரணமாக ஆஸி.-தெ.ஆ. ஆட்டம் தொடங்கபடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆஸ... மேலும் பார்க்க

இந்தியாவின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்

இந்திய அணியின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று முன் தினம் (ப... மேலும் பார்க்க

ரூ.20 லட்சத்தில் தொடங்கி ரூ.23.75 கோடி வரை..! என்ன சொல்கிறார் வெங்கடேஷ் ஐயர்!

கேப்டன் பதவி வந்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தலைமைத் தாங்க தயார் என்று கேகேஆர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் 2-வது முறையாக கோப்பையை வென்ற... மேலும் பார்க்க