செய்திகள் :

அயோத்தி ராமர் கோயில்: 5.5 கோடி பக்தர்கள் வருகை!

post image

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு 5.5 கோடி பக்தர்கள் வருகை தந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது.

இந்தக் கோயிலுக்கு, நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், கோயிலின் முதல் நாளிலிருந்து இதுவரையில் உலகம் முழுவதிலும் இருந்து 5.5 கோடி பக்தர்கள் வருகை தந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என கிட்டத்தட்ட 4.5 லட்சம் முக்கிய பிரமுகர்கள் வருகைதந்து, கோயிலில் மரியாதை செலுத்தியதாகவும் தெரிவித்தது.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், நிர்வாகப் பணிகள் மட்டுப்படுத்தப்படவில்லை என்று கூறியது. முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவருக்குமான தரிசனத்துக்கான ஏற்பாடுகள், சுமூகமான வருகை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

உலகளவில் ஒரு முக்கிய மத ஆலயமாக அயோத்தி திகழ்வதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நெகிழ்ச்சியுடன் கூறினார். வரும் காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!

காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி: அஸ்ஸாம் முதல்வர்!

அஸ்ஸாம் குவாஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி கட்டப்படும் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காமாக்யா கோயிலுக்கு அஸ்ஸா... மேலும் பார்க்க

பைசா செலவில்லாமல் விண்வெளி சென்ற ராகேஷ் சர்மா! சுபான்ஷு சுக்லாவுக்கு ரூ.544 கோடி செலவு ஏன்?

ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்துக்கு ஒரு ரூபாய்கூட செலவு ஏற்படவில்லை. ஆனால், சுபான்ஷு சுக்லாவுக்கு மட்டும் ஏன் செலவழிக்கப்படுகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.சர்வதேச விண்வெளி நிலையத்து... மேலும் பார்க்க

கட்சிரோலி, கோண்டியாவில் 4 தாலுகாக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை: மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டம் முழுவதும் மற்றும் கோண்டியாவில் உள்ள நான்கு தாலுக்காக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த ஐந்து ... மேலும் பார்க்க

எல்லாவற்றையும் டிரம்ப் அறிவிக்கிறாரே.. இந்தியா அவுட்சோர்ஸிங் கொடுத்துவிட்டதா? ப. சிதம்பரம் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போர், இந்தியா - அமெரிக்கா இடையேயான வணிக ஒப்பந்தம் என அனைத்தையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருவது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியிர... மேலும் பார்க்க

கர்ப்பிணிக்கு மருந்துக்கு பதிலாக ஆசிட்! மருத்துவமனை அலட்சியத்தால் பரபரப்பு!

மகாராஷ்டிரத்தில் மகப்பேறுக்காக சென்ற பெண்ணின் மீது தவறுதலாக திராவகம் செலுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தில் ஜல்னா நகரில் அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக ஷீலா பலேராவெ என்பவர் ... மேலும் பார்க்க

கேரளத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! அணைகள் திறப்பால்..மக்கள் வெளியேற்றம்!

கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 28) இந்திய வானிலை ஆய்வு மையம் ”ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளத்தில் முன்கூட்... மேலும் பார்க்க