செய்திகள் :

தபால் நிலையங்களில் யுபிஐ வசதி! ஆகஸ்டில் அமலுக்கு வருகிறது!!

post image

இந்தியா முழுவதும் தபால் நிலையங்களில் வருகிற ஆகஸ்ட் முதல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை(யுபிஐ) மூலமாக பணம் செலுத்தும் வசதி நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தபால் நிலையங்களிலும் நவீன பணப்பரிமாற்ற வசதிகள் படிப்படியாக கொண்டு வரப்படுகின்றன. தபால் நிலையங்களில் ஏடிஎம் மூலமாக பணம் எடுக்கும் வசதி மக்களுக்கு பெரிதும் உதவி வருகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் உள்ள கவுன்டர்களில் பணமாகக் கொடுத்து தபால்நிலைய வங்கிக்கணக்கில் செலுத்தும் வசதிதான் தற்போது உள்ளது. இந்நிலையில் பணமாக அல்லாமல் யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாக கவுன்டர்களில் பணம் செலுத்தும் வசதி விரைவில் வர உள்ளது.

இது ஆகஸ்ட் முதல் அமலுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான இறுதிப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த யுபிஐ பணப்பரிவர்த்தனை தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post offices across India to start accepting digital payments from August

வட இந்தியாவில் தமிழ் கற்கட்டும்! கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

ஹிந்தி மொழி குறித்த மத்திய அமைச்சரின் கருத்துக்கு, வட மாநிலத்தோரும் தமிழ் கற்கட்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி பதில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, கனிமொழி எம்.பி., எந்த மொழிக்கும் ஹிந்தி எதிரி அல்ல ... மேலும் பார்க்க

நீலகிரி, கோவையில் இன்று கனமழை எச்சரிக்கை!

கோவை மற்றும் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல அனுமதி

காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டிருந்ததால் கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.கொடைக்கானலில் காட்டு யானைகள், இடம்பெயர்ந்து அடர்ந்த வனப்... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு: ஜூலை 1 முதல் பிரசார பயணம் தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான பயணத்தை தொடங்கவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுகவினருக்கு கட்சித் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ... மேலும் பார்க்க

நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

சேலம்: கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர்வரத்து எதிரொலியால் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.இந்த நீர்வரத்து தொடர்ந்தால், அடுத்த ஒரு வ... மேலும் பார்க்க

ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து... மேலும் பார்க்க