செய்திகள் :

நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

post image

சேலம்: கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர்வரத்து எதிரொலியால் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்த நீர்வரத்து தொடர்ந்தால், அடுத்த ஒரு வார காலத்தில் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்குநீர் வரத்து அதிகரித்து நிரம்பிய நிலையில் உள்ளன. அணைகளில் பாதுகாப்புக் கருதிஉபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர்வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 60,740 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 73,452 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று முன்தினம் காலை 112.73அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.84 அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 4.16 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 22,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 88.59 டி.எம்.சி.யாக உள்ளது.

நீர்வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்தால் ஒரு வார காலத்தில் மேட்டூர் அணை வரலாற்றில் 45வது ஆண்டாக அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தபால் நிலையங்களில் யுபிஐ வசதி! ஆகஸ்டில் அமலுக்கு வருகிறது!!

இந்தியா முழுவதும் தபால் நிலையங்களில் வருகிற ஆகஸ்ட் முதல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை(யுபிஐ) மூலமாக பணம் செலுத்தும் வசதி நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தபால்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல அனுமதி

காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டிருந்ததால் கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.கொடைக்கானலில் காட்டு யானைகள், இடம்பெயர்ந்து அடர்ந்த வனப்... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு: ஜூலை 1 முதல் பிரசார பயணம் தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான பயணத்தை தொடங்கவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுகவினருக்கு கட்சித் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ... மேலும் பார்க்க

ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்துக்கு ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியா: கொள்முதல் கோரியது தமிழக அரசு

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்துக்காக ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியாவை கொள்முதல் செய்ய தமிழக அரசு தீா்மானித்துள்ளது. இதற்கான கொள்முதல் அறிவிக்கையை தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு கூ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை இன்று திறப்பு?

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்ததால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. கேரளத்தில் ப... மேலும் பார்க்க