அருப்புக்கோட்டை விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா !
அருப்புக்கோட்டை: விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா; மலர் தூவி வரவேற்ற பக்தர்கள்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு வனவிலங்குகளைப் பாதுகாக்கும் விதமாகவும், கோயில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலும், கோயில்களில் யானைகள் பக்தர்களைத் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் மேலும் பக்தியை வளர்க்கும் விதமாகவும் நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா இணைந்து அன்பளிப்பாக ரூபாய் 6 லட்சம் மதிப்பில் கேரளாவில் உருவாக்கப்பட்டுள்ள கஜா என்ற இயந்திர யானை வழங்கப்பட்டுள்ளது.
இந்த யானை சுமார் 3 மீட்டர் உயரம், 800 கிலோ எடையுடன், வடிவமைப்பில் பிரமாண்டமாக இந்த யானை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திர யானை சக்கரங்கள் மூலம் வீதி உலா செல்லும் வகையிலும் அதன் காதுகள், துதிக்கைகள், தலை என அனைத்தும் அசையும் வகையில் தத்ரூபமாக உண்மையான யானை போன்றே உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த யானை பக்தர்கள் மீது தண்ணீரைப் பீச்சி அடிக்கும் வகையிலும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திர யானை அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் கலந்து கொண்டு புதிய யானையை அறிமுகம் செய்து வைத்தனர்.
மேலும் பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் இணைந்து மலர் தூவி இந்தப் பிரமாண்ட யானையை வரவேற்றனர். இந்த இயந்திர யானைக்குத் தீபாரதனையும் நடைபெற்றது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...