செய்திகள் :

வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

post image

அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவையடுத்து வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த அமுல் கந்தசாமி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி காலமானார்.

1980 -ஆம் ஆண்டு அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தாா். மாணவரணி மாவட்டச் செயலா், இளைஞரணி மாவட்டச் செயலா், கவுண்டம்பாளையம் தொகுதி பொதுக்குழு உறுப்பினா் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளாா்.

கடந்த 2011 முதல் 2021 வரை அன்னூா் பகுதி மாவட்ட கவுன்சிலராகவும், ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா். தற்போது எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலராக இருந்து வந்தாா்.

இவரது மறைவையடுத்து வால்பாறை சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

Valparai Assembly constituency has been declared vacant following the death of AIADMK MLA Amul Kandasamy.

வெள்ளத்தில் சிக்கிய யானை கரையைக் கடக்கும் காட்சி: வைரல் விடியோ!

வெள்ளத்தில் சிக்கிய யானையானது கரையைக் கடக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலத்திற்குள்பட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.இத... மேலும் பார்க்க

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்: சீமான்

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் ஸ்ரீக... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா !

அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நடிகை த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 28) ஒருசில இடங்களிலும், ப... மேலும் பார்க்க

கடனை செலுத்த வங்கி அதிகாரிகள் அழுத்தம்: பால் நிறுவன இயக்குநர் தற்கொலை!

கடனை செலுத்த தனியார் வங்கி அதிகாரிகளின் அழுத்தத்தால் தனியார் பால் நிர்வாக இயக்குநர் ஜே.ராஜபாண்டி தற்கொலை கொண்ட நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்... மேலும் பார்க்க

தமிழ்நாடு என்றாலே மத்தியில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி: தவெக

தமிழ்நாடு என்றாலே மத்தியில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி என்று தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பத... மேலும் பார்க்க