செய்திகள் :

மோசமான பந்துவீச்சுக்கு முழுமையாக பொறுப்பேற்கிறேன்: பிரசித் கிருஷ்ணா

post image

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது மோசமான பந்துவீச்சுக்கு முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்வதாக பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா 200 ரன்களுக்கும் (இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து) அதிகமாக விட்டுக்கொடுத்தது விமர்சனத்துக்கு உள்ளானது. முன்னாள் வீரர்கள் பலரும் அவரது பந்துவீச்சு குறித்து கடுமையாக விமர்சித்தனர்.

முழுமையாக பொறுப்பேற்கிறேன்

பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது மோசமான பந்துவீச்சுக்கு முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்வதாக பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நான் நினைத்தது போன்று பந்துவீச முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் சரியான லென்த்தில் என்னால் பந்துவீச முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சு லென்த்தை மாற்றி, முதல் இன்னிங்ஸைக் காட்டிலும் நன்றாக பந்துவீசினேன்.

விக்கெட் எடுப்பதற்காக முயற்சி செய்தேன். ஆனால், முடியவில்லை. காரணங்கள் கூறுவது சரியான விஷயமாக இருக்காது. நான் நன்றாக செயல்பட்டிருக்க வேண்டும். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட முடியாததற்கு முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

summary

Prasith Krishna has said that he takes full responsibility for his poor bowling performance in the first Test against England.

இதையும் படிக்க: யு-19 முதல் ஒருநாள் போட்டி: வைபவ் சூர்யவன்ஷி அதிரடி; இந்தியா அபார வெற்றி!

சதம் விளாசி ஸ்மிருதி மந்தனா சாதனை; இங்கிலாந்துக்கு 211 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர... மேலும் பார்க்க

மிகுந்த ஏமாற்றமளிக்கிறது; டெஸ்ட் தொடரை இழந்ததால் புலம்பும் வங்கதேச கேப்டன்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: அறிமுகப் போட்டியில் அரைசதம், சதம் விளாசிய தென்னாப்பிரிக்க வீரர்கள்!

அறிமுகப் போட்டியிலேயே அரைசதம், சதம் விளாசி தென்னாப்பிரிக்க வீரர்கள் அசத்தியுள்ளனர்.தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அ... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா நிதானம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது.தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயண... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிராக வரலாறு படைத்த ஷமர் ஜோசப்..! தோல்வியிலும் மிளிரும் மே.இ.தீ. வீரர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய மே.இ.தீ. வீரர் ஷமர் ஜோசப் கிரிக்கெட் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3 டெஸ்ட், 5 டி20 ப... மேலும் பார்க்க

பிரபாத் ஜெயசூர்யா அசத்தல்: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தொடரை வென்ற இலங்கை!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை அணி வென்றது. இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. இரண... மேலும் பார்க்க