செய்திகள் :

ஜம்மு - காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் இருக்கக் கூடாது: அம்பேத்கரை மேற்கோள் காட்டிய தலைமை நீதிபதி

post image

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்திய தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் வரவேற்றுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மத்திய அரசு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ அதிரடியாக ரத்து செய்தது. அதன்பின், ஜம்மு - காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும் லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டன.

இந்தநிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு நடவடிக்கையாகப் பார்க்கப்படும் ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி தலைமை நீதிபதி கவாய் இப்போது பேசியிருக்கிறார்.

மகாராஷ்டிரத்தின் நாக்பூர் நகரில் இன்று(ஜூன் 28) நடைபெற்றதொரு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், “அரசியல் சாசன சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, என்னை உள்ளடக்கிய நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, அந்த விசாரணையில் நான் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சொல்லியிருப்பதை மேற்கோள் காட்டியிருந்தேன்.

‘ஒரு நாட்டுக்கு ஒரு அரசியல் சாசனம் இருப்பதே பொருத்தமாக இருக்கும்... நாம் நமது நாட்டை ஒற்றுமையாக இருக்கச் செய்ய விரும்பினால், ஒரேயொரு அரசமைப்பு சாசனம் மட்டுமே நமக்கு தேவை’ என்பதே அம்பேத்கர் சொன்னவை.

பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்... இப்படி நம் அண்டை நாடுகளில் நிலவும் சூழலை ஒப்பிட்டுப் பார்த்தால், நம் நாட்டில் சவால்கள் பல வந்தபோதெல்லாம் இந்தியா ஒற்றுமையாகவே விளங்கியது. அதற்கு உறுதுணையாக அரசியல் சாசனம் இருந்தது குறிப்பிடத்தக்கது” என்றார்.

பாஜக அரசால் பெயர் மாற்றப்பட்ட ஊர்கள்: புதிய வரவாக சிந்தூர்புரம்! 11 ஊர்ப் பெயர்கள் விரைவில் மாற்றம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்ற பிறகு பல முக்கிய ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் புதுவரவாக இண... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கடைசி உடலும் அடையாளம் காணப்பட்டது

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவரின் கடைசி உடலும் அடையாளம் காணப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், ஏர் இந்... மேலும் பார்க்க

புரி ரத யாத்திரையில் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.பிரதான கோயிலி... மேலும் பார்க்க

மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது: காங். விமர்சனம்

’அமிர்த காலம்’ என்று அரசு சொல்லிக்கொள்ளும் இக்காலக்கட்டத்தில் ’மக்களின் சேமிப்பு காலி; முதலீட்டில் வளர்ச்சி இல்லை; மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது’ என்று கா... மேலும் பார்க்க

மும்பை: கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலி

மும்பையில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், வொர்லியில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். ஒருவர் க... மேலும் பார்க்க

' ரா' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்

இந்தியாவின் 'ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது தலைவராக உள்ள ரவி சின்ஹாவின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறவுளள்து. இதனையடுத்து அந்த பதவிக்கு புதிய ... மேலும் பார்க்க