பாஜகவின் தன்னிச்சையான செயல்பாடு: மாற்று முடிவு குறித்து அதிமுக பரிசீலிக்க வேண்டு...
புரி ரத யாத்திரையில் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு!
ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.
பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு ரதங்கள் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு 9 நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு ரதங்கள் மீண்டும் ஜெகந்நாதா் ஆலயத்துக்குத் திரும்பும்.

இவ்விழாவில் இந்தியாவின் பெரும் செல்வந்தரும் தொழிலதிபருமான கௌதம் அதானி தமது குடும்பத்துடன் இன்று(ஜூன் 28) கலந்துகொண்டார். அவர் அங்குள்ள பக்தர்களுக்காக சமையல் செய்தும் உபசரித்தார்.
அவருடன் அவரது மனைவி ப்ரீத்தி, மகன் கரன் ஆஜியோருக் வருகை டஹ்ந்திருந்தனர். பக்தர்களுக்காக தயார் செய்யப்படும் அன்னதானக் கூடத்தில் அதானி அப்பளம் பொரித்ததும் சாதம் சமைத்ததும் அங்கு திரண்டிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்த படங்கள் இப்போது வெளியாகியுள்ளன.

ரத யாத்திரையையொட்டி முக்கிய விஐபிக்கள் பலர் கலந்துகொள்வதால், மத்திய ஆயுதக் காவல் படையினா், காவல் துறையினா், தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.