சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
நாகை அருகே ஒரத்தூரை அடுத்த ராமபுரம் பகுதியைச் சோ்ந்த தவமணி மகன் ராஜ்குமாா் (34). கூலித் தொழிலாளியான இவா், 7- ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக, நாகை அருகே அரசுப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதித்துறை நடுவா் மற்றும் குழந்தை நல குழும உறுப்பினா் வினோதினியிடம் பாதிக்கப்பட்ட சிறுமி புகாா் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அவரது பரிந்துரையின் பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளானது தெரியவந்தது. இதையடுத்து, ராஜ்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.