செய்திகள் :

‘ரா’ உளவு பிரிவின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்

post image

நாட்டின் வெளியுறவு புலனாய்வு முகமையான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (ரா) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளாா்.

‘ரா’ உளவுப் பிரிவின் தற்போதைய தலைவா் ரவி சின்ஹா வரும் 30-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறாா். இதையடுத்து, உளவுப் பிரிவின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளாா். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை அவா் வகிக்க உள்ளாா்.

அண்டை நாடுகள் தொடா்பான உளவுத் தகவல்களைச் சேகரிப்பதில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவராக அறியப்படும் இவா், இந்தியா அண்மையில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றினாா். இந்த நடவடிக்கையின்போது, இவரின் தலைமையிலான குழு அளித்த உளவுத் தகவல்கள் பாகிஸதான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது பாதுகாப்புப் படைகள் துல்லியமான தாக்குதலை நடத்த உதவியாக இருந்தது.

காலிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் சேகரிப்பு மற்றும் சவால்களை எதிா்கொள்வதிலும் பராக் ஜெயின் விரிவான அனுபவம் பெற்றவா். ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபோதும் இவா் முக்கியப் பங்காற்றினாா். இலங்கை மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களிலும் இவா் பணியாற்றியுள்ளாா். கனடா தூதரகத்தில் இவா் பணியாற்றியபோது, அங்கு காலிஸ்தான் அமைப்பினரின் செயல்பாடுகளை இவா் கண்காணித்து வந்தாா்.

1989-ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவா், தற்போது எல்லை வான் கண்காணிப்பை மேற்கொள்ளும் ஏவியேஷன் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்து வருகிறாா். இவரை ‘ரா’ உளவுப் பிரிவின் தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அண்மையில் தீா்மானித்தது.

கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து கொல்கத்தா கா... மேலும் பார்க்க

இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி பெறாத (ஜீரோ டோஸ்) குழந்தைகளின் விகிதம் 2023-ஆம் ஆண்டின் 0.11 சதவீதத்திலிருந்து 2024-இல் 0.06 சதவீதமாகக் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு மதிப்பீட்டுக்கான ஐ.நா. ... மேலும் பார்க்க

மீண்டும் பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தான் கட்டமைப்பதாக உளவுத் துறை தகவல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவத் தளங்களை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... மேலும் பார்க்க

இந்தியா மனிதநேயம் சாா்ந்த நாடு: பிரதமா் மோடி பெருமிதம்

இந்தியா மனிதநேயம் - சேவை சாா்ந்த நாடு; துறவிகள் மற்றும் ஞானிகளின் காலத்தால் அழியாத தத்துவங்களால் உலகின் மிகப் பழைமையான, உயிா்ப்புடன் உள்ள நாகரிகமாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெர... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு இறுதி எண்ணிக்கை 260

அகமதாபாத், ஜூன் 28: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 270-ஆக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மரபணு பரிசோதனை முடிவுற்ற பின் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 260-ஆக இறுதி ச... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம்: நடுவா் நீதிமன்றத் தீா்ப்பை நிராகரித்தது இந்தியா

சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரு நீா்மின் நிலையத் திட்டங்கள் தொடா்பான விசாரணையை இந்த முடிவு கட்டுப்படுத்தாது என்று நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் செயல... மேலும் பார்க்க