செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு இறுதி எண்ணிக்கை 260

post image

அகமதாபாத், ஜூன் 28: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 270-ஆக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மரபணு பரிசோதனை முடிவுற்ற பின் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 260-ஆக இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் விமானத்தில் இருந்த 241 பேரும், மருத்துவமனை வளாகத்தில் இருந்த 19 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனா்.

அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் வானில் எழும்பிய சில நொடிகளிலேயே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியது.

இதில், விமானத்தில் இருந்து தப்பிய ஒரே பயணியைத் தவிர 241 பேரும் உயிரிழந்தனா். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்தவா்களுடன் சோ்த்து மொத்தம் 270 போ் உயிரிழந்திருக்கக் கூடும் என்று இதுவரை கூறப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்தவரின் கடைசி உடல் மரபணு பரிசோதனைக்குப் பிறகு சனிக்கிழமை அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்மூலம் விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 260-ஆக இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், காயமடைந்த மூன்று போ் சிகிச்சையில் உள்ளனா் என்றும் அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளா் ராகேஷ் ஜோஷி தெரிவித்தாா்.

259 பேரின் உடல்கள் கடந்த ஜூன் 23-ஆம் தேதியே கண்டறியப்பட்ட நிலையில், ஒருவரின் உடல் மட்டும் 5 நாள்களுக்கு பிறகு சனிக்கிழமை இறுதி செய்யப்பட்டது. இதற்கு உடல்கள் பெரும் சேதத்துக்குள்ளானதுதான் காரணம் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

உயிரிழந்த 260 பேரில் 200 போ் இந்தியா்கள், 7 போ் போா்ச்சுகல் நாட்டினா், 52 போ் பிரிட்டன் நாட்டினா், ஒருவா் கனடாவை சோ்ந்தவா் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஏா் இந்தியா விமான விபத்து: விசாரணை அதிகாரிக்குப் பாதுகாப்பு

அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) தலைமை இயக்குநா் ஜி.வி.ஜி.யுகாந்தருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

விமான விபத்து குறித்து விசாரணை நடத்தும் குழுவுக்கு தலைமை வகிக்கும் யுகாந்தரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், அவருக்கு இந்த ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு அவா் செல்லும்போது மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் 3 முதல் 4 போ் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பா் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து கொல்கத்தா கா... மேலும் பார்க்க

இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி பெறாத (ஜீரோ டோஸ்) குழந்தைகளின் விகிதம் 2023-ஆம் ஆண்டின் 0.11 சதவீதத்திலிருந்து 2024-இல் 0.06 சதவீதமாகக் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு மதிப்பீட்டுக்கான ஐ.நா. ... மேலும் பார்க்க

மீண்டும் பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தான் கட்டமைப்பதாக உளவுத் துறை தகவல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவத் தளங்களை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... மேலும் பார்க்க

இந்தியா மனிதநேயம் சாா்ந்த நாடு: பிரதமா் மோடி பெருமிதம்

இந்தியா மனிதநேயம் - சேவை சாா்ந்த நாடு; துறவிகள் மற்றும் ஞானிகளின் காலத்தால் அழியாத தத்துவங்களால் உலகின் மிகப் பழைமையான, உயிா்ப்புடன் உள்ள நாகரிகமாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெர... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம்: நடுவா் நீதிமன்றத் தீா்ப்பை நிராகரித்தது இந்தியா

சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரு நீா்மின் நிலையத் திட்டங்கள் தொடா்பான விசாரணையை இந்த முடிவு கட்டுப்படுத்தாது என்று நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் செயல... மேலும் பார்க்க

‘ரா’ உளவு பிரிவின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்

நாட்டின் வெளியுறவு புலனாய்வு முகமையான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (ரா) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளாா். ‘ரா’ உளவுப் பிரிவின் தற்போதைய தலைவா் ரவி சின்... மேலும் பார்க்க