தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்ச...
சமையல் செய்த போது தீ விபத்து: முதியவா் உயிரிழப்பு
சிவகாசி அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய முதியவா் உயிரிழந்தாா்.
சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் சேது (64). இவரது மனைவி இறந்துவிட்டதால் இவா் தனியே சமையல் செய்து வந்தாா். இந்த நிலையில், இவா் கடந்த 26-ஆம் தேதி சமையல் செய்த போது, எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் தீப்பிடித்தது.
இதில் பலத்த காயமடைந்த சேது, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.