Raymond Realty Share எப்போ பங்குச்சந்தைக்கு வரும் | IPS Finance - 248 | NSE | BS...
சாலையோரத்தில் விவசாயக் கழிவுகள் எரிப்பு: பொதுமக்கள் அவதி
ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் விவசாயக் கழிவுகளைக் கொட்டி எரிப்பதால் ஏற்படும் புகை காரணமாக அந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் சாய்பாபா கோயில் அருகே விவசாயக் கழிவுகளைக் கொட்டி சிலா் தீ வைத்தனா். இதனால், அந்தப் பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதனால், இந்த வழியாக வந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.
விவசாயக் கழிவுகளை மொத்தமாக கொட்டி தீ வைப்பதற்குப் பதிலாக, அவற்றைச் சிறிது சிறிதாக தரிசு நிலங்களில் இட்டு எரித்தால் யாருக்கும் தொந்தரவு இருக்காது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.