தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்ச...
ஜூலை 1-ல் வேளாண்மை எந்திரங்கள் செயல்விளக்க முகாம்!
தேனி சுக்குவாடன்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் வருகிற ஜூலை 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு வேளாண்மை எந்திரங்களின் பயன்பாடு, இயக்கம், பராமரிப்பு ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண்மை எந்திரங்கள் குறித்த விழிப்புணா்வு முகாமில் தென்னை மட்டை தூளாக்கும் கருவி, ட்ரோன் மருந்து தெளிப்பான், கதிரடிக்கும் எந்திரம் உள்ளிட்ட வேளாண்மை எந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, இவற்றின் பயன்பாடு, இயக்கம், பராமரிப்பு ஆகியவை குறித்து வேளாண்மை பொறியியல் துறை அலுவலா்கள, தனியாா் நிறுவனங்கள் மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளனா்.
மேலும், விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். இந்த முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.