செய்திகள் :

மத்தூர்: சாலை விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரியில் இரவுநேர கண்காணிப்பு பணியில் இருந்த தலைமை காவலர் ஜெஸ்மின் மில்டன் ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளரான மகாலிங்கம், தலைமைக் காவலர் ஜெஸ்மின் மில்டன் ராஜ் என்கிற மில்டன், போச்சம்பள்ளி ஏழாம் அணி பயிற்சிக் காவலர் சுகுமார் ஆகியோர் சனிக்கிழமை (ஜூலை 28) இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சமயத்தில், நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கோட்டூர் மாரியம்மன் கோயிலில் தணிக்கை செய்து, கையொப்பமிட்டு மத்தூர் பகுதியில் தணிக்கை செய்ய தலைமை காவலர் மில்டன் மற்றும் பயிற்சி காவலர் சுகுமார் ஆகியோர் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கர்நாடக மாநிலம், குடகிலிருந்து புதுச்சேரிக்கு கோவில் சிலைகள் செய்ய கிரானைட் கற்கள் பாரம் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி மீது, அதன் பின் தொடர்ந்து வந்த இரும்பு பாரம் ஏற்றிய லாரி மோதியது.

இதில் நிலைதடுமாறிய டாரஸ் லாரி, காவலர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தலைமை காவலர் மில்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

இரவுநேர கண்காணிப்பின்போது சாலை விபத்தில் சிக்கி தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

கீழடி அறிக்கையை மத்திய அரசு இனியாவது வெளியிடுமா? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

கீழடி அறிக்கையை மத்திய அரசு இதற்கு பின்பாவது வெளியிடுமா என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு ச... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் கோடை விழா

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே சுற்றுலா தலமாக விளங்கும் ஏலகிரி மலையில் கோடை விழா, ஏலகிரி விழா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

10 ஆண்டுகள் நிறைவு செய்த சென்னை மெட்ரோ ரயில்! 40 கோடி பேருக்கு நன்றி!

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.சென்னையில் 2015 ஆம் ஆண்டில் ஜூன் 29 ஆம் தேதியில்தான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, இன்றுடன்... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிகிறது. மேட்டூர் அணை நிரம்புவது தாமதமாகிறது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்திலும் பெய்த மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாகத்தான் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ... மேலும் பார்க்க

உருது பாட ஆசிரியா் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ‘உருது’ பாட ஆசிரியா் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க