செய்திகள் :

வங்கதேசம்: பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் இரு மதத்தினரிடையே மோதல்!

post image

வங்கதேசத்தில் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால், இரு மதத்தினரிடையே மோதல் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ராமச்சந்திரபூர் பச்கிட்டா கிராமத்தில், ஜூன் 26 ஆம் தேதியில் 21 வயது (இந்து) பெண்ணை வங்கதேச தேசியவாதக் கட்சியின் உள்ளூர் தலைவர் (BNP) ஃபசோர் அலி (38) பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் துபையில் பணிபுரியும் நிலையில், உள்ளூர் திருவிழாவுக்காக தனது தந்தையின் வீட்டில் குழந்தைகளுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில்தான், வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் பெண்ணின் வீட்டுக்குள் நுழைய முயன்ற அலியை, பெண் தாக்கிவிட்டு, வீட்டின் கதவையும் மூடியுள்ளார்.

இருப்பினும், வீட்டினுள் சென்ற அலி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தப்பியோடியுள்ளார். சம்பவத்தின்போது, அலியை சிறைப்பிடித்த அப்பகுதி மக்கள், அலியை தாக்கியுள்ளனர். இருப்பினும், அவர்களிடமிருந்தும் அலி தப்பியோடி விட்டார்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அலியை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று (ஜூன் 29) காலை 5 மணியளவில் சைதாபாத் பகுதியில் அலி உள்பட 5 பேரையும், சம்பவம் தொடர்பான விடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவமானது, வங்கதேசத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து, இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அடுத்த 2.5 ஆண்டுகளில் வேலை பறிபோகும் அபாயம்! ஏஐ ஆக்கிரமிப்பால் ஊழியர்கள் கவலை!

செய்யறிவு தாக்கத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் பல்வேறு வேலைகள் பாதிக்கப்படும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் செய்யறிவின் (செயற்கை நுண்ணறிவு) தாக்கம் குறித்து பிளைண்ட் குரூப்ஸ் கரு... மேலும் பார்க்க

அமெரிக்காவிலும் வாரிசு அரசியலா? டிரம்ப்பின் மகனும் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகனும் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா என்று ஆங்கில செய்தி ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.அமெரிக்காவில் அதிபர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. மேலும... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பிறப்புரிமை குடியுரிமை உத்தரவு: விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது -அமெரிக்க உச்சநீதிமன்றம்

பிறப்பின் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் மாற்றம் செய்து அந்நாட்டு அதிபா் டிரம்ப் கையொப்பமிட்ட நிா்வாக உத்தரவுக்கு நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது என்று அந்நாட்டு ... மேலும் பார்க்க

உக்ரைன்: ட்ரோன் தாக்குதலில் தம்பதி உயிரிழப்பு

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷியாநடத்திய ட்ரோன் தாக்குதலில் கணவன்-மனைவி உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா்.இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:ஒடேசா நகரில் ரஷியா ஏவ... மேலும் பார்க்க

காங்கோ - ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்

காங்கோவின் கிழக்குப் பகுதியில் தொடா்ந்து நடைபெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்கும், அண்டை நாடான ருவாண்டாவுக்கும் இடையே அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பம... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடருகிறது: இன்றைய பலி எண்ணிக்கை 49!

காஸாவில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 49 பேர் வரை கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) இரவு தொடங்கி சனிக்கிழமை(ஜூன் 28) வரையிலு... மேலும் பார்க்க