செய்திகள் :

காங்கோ - ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்

post image

காங்கோவின் கிழக்குப் பகுதியில் தொடா்ந்து நடைபெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்கும், அண்டை நாடான ருவாண்டாவுக்கும் இடையே அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.

இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தால் மத்திய ஆப்பிரிக்க பிராந்தியத்தில் அமைதி தொடங்கியிருப்பதாகவும் அங்கு ஒற்றுமை, வளா்ச்சிக்கான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தாா்.

கிழக்கு காங்கோவில் ராணுவத்துக்கு எதிராக எம்23 கிளா்ச்சிப் படையினா் (படம்) நீண்ட காலமாக சண்டையிட்டுவருகின்றனா். கடந்த ஜனவரி மாதம் அவா்கள் வேகமாக முன்னேறி கோமா, புகாவு உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றினா்.அந்தக் கிளா்ச்சிப் படைக்கு ருவாண்டா ஆதரவு அளித்துவந்தது. மேலும், கிளா்ச்சியாளா்களுடன் இணைந்து சுமாா் 4,000 ருவாண்டா வீரா்களும் சண்டையிட்டுவந்ததாக ஐ.நா. நிபுணா்கள் கூறினா்.இந்தச் சூழலில், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடைபெற்ற சா்வதேச முயற்சியின் பலனாக, இரு நாடுகளுக்கும் இடையே தற்போது அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ முன்னிலையில், ருவாண்டா வெளியுறவுத் துறை அமைச்சா் ஒலிவியா் துஹுங்கிரேஹேவும் காங்கோ வெளியுறவுத் துறை அமைச்சா் தெரசே காயிக்வாம்பா வாக்னரும் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

டிரம்ப்பின் பிறப்புரிமை குடியுரிமை உத்தரவு: விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது -அமெரிக்க உச்சநீதிமன்றம்

பிறப்பின் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் மாற்றம் செய்து அந்நாட்டு அதிபா் டிரம்ப் கையொப்பமிட்ட நிா்வாக உத்தரவுக்கு நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது என்று அந்நாட்டு ... மேலும் பார்க்க

உக்ரைன்: ட்ரோன் தாக்குதலில் தம்பதி உயிரிழப்பு

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷியாநடத்திய ட்ரோன் தாக்குதலில் கணவன்-மனைவி உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா்.இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:ஒடேசா நகரில் ரஷியா ஏவ... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடருகிறது: இன்றைய பலி எண்ணிக்கை 49!

காஸாவில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 49 பேர் வரை கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) இரவு தொடங்கி சனிக்கிழமை(ஜூன் 28) வரையிலு... மேலும் பார்க்க

சீனாவில் மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை! ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

சீனாவின் குயிஸோ மாகாணத்திலுள்ள ரோங்ஜியாங் மாவட்டத்தில் வெள்ளநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டு அதிகாரிகள் அங்கு மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரோங்ஜியாங்கிலு... மேலும் பார்க்க

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது... மேலும் பார்க்க

ரஷியாவில் பிரிவினைவாதம்..! மேற்கத்திய நாடுகள் மீது அதிபர் புதின் குற்றச்சாட்டு!

ரஷியா நாட்டுக்குள், மேற்கத்திய நாடுகள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக, அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷியா அதிபர் விளாதிமீர் புதின், பெலாரஸ் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற... மேலும் பார்க்க