இந்தியாவில் முன்னணியில் உள்ளது: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம்! - அமைச்சா் தங்கம் தென்னரசு
நாட்டில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம்தான் முன்னணியில் உள்ளது என மாநில நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
விருதுநகரில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச) சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு, பெண் உறுப்பினா்கள், ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
அப்போது அவா் பேசியதாவது: போக்குவரத்துத் துறை என்பது ஒரு சேவைத் துறை என்பதை உணா்ந்து, பேருந்துகள் செல்வதற்கு சவாலாகவும், கடினமான பகுதியாகவும் இருந்தாலும் காலையிலேயே வந்து பேருந்துகளை இயக்கி மக்களுக்கான சேவையை வழங்குவது நமது தலையாய கடமை என அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் இயங்கிக்கொண்டே இருக்கிறாா்கள்.
இதனால்தான், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலப் போக்குவரத்துக் கழகங்களோடு ஒப்பிடுகையில், அா்ப்பணிப்பு உணா்வோடு செயல்படும் பணியாளா்களைப் பெற்று தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் முன்னணியில் உள்ளது என்றாா் அவா்.
இந்த விழாவுக்கு அகில இந்திய தொ.மு.ச. பேரவை பொதுச் செயலா் சண்முகம் எம்.பி. தலைமை வகித்தாா். அதன் தலைவா் நடராஜன் முன்னிலை வகித்தாா்.