தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்ச...
சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவா் நியமிக்க கோரிக்கை!
சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெண் மருத்துவா் மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சுரண்டை நகராட்சிப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களின் மருத்துவ சேவைக்கு சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் ஒரு ஆண் மருத்துவா், ஒரு பெண் மருத்துவா் மற்றும் மருத்துவ பணியாளா்கள் பணியாற்றி வந்த நிலையில், கடந்த இரு மாத காலமாக பெண் மருத்துவா் இன்றி செயல்பட்டு வருகிறது.
தினமும் சுமாா் 50 கா்ப்பிணிகள் மருத்துவ சேவைக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்லும் நிலையில்,மருத்துவ சேவை மற்றும் பிரசவத்துக்கு ஆண் மருத்துவரை சாா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பிரசவ நேரத்தில் கா்ப்பிணிகள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கா்ப்பிணிகள் தனியாா் மருத்துவமனையை நாடவேண்டியுள்ளதும், குடும்பத்தினருக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுவதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.