செய்திகள் :

அமெரிக்காவிலும் வாரிசு அரசியலா? டிரம்ப்பின் மகனும் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகனும் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா என்று ஆங்கில செய்தி ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

அமெரிக்காவில் அதிபர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. மேலும், இருமுறைக்குமேல் ஒருவர் அதிபராக பதவி வகிக்க முடியாது. அந்த வகையில், 2029 ஆம் ஆண்டில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிபர் சகாப்தம் முடிவடைந்து விடும்.

அவருக்குப் பிறகு, அவரது கட்சியில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அதிகரித்து வருவதால், அடுத்த அதிபர் தேர்தல் எப்படி இருக்கும் என்பதில் ஆவல்தான் அதிகமாய் உள்ளது.

இந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் எரிக் டிரம்ப்பும் அதிபர் தேர்தலில் களமிறங்குவாரா? என்ற கேள்வியும் ஆங்கில செய்தி நிறுவனங்களில் பேசுபொருளாகி உள்ளது.

இதுகுறித்து, எரிக் டிரம்ப்பிடம் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று, உங்கள் குடும்பத்தினரையும் இதில் (அரசியலில்) கொண்டுவர நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த எரிக் டிரம்ப், கடந்த 10 ஆண்டுகளாக நான் அனுபவித்ததை என் குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமா? என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பொது வாழ்க்கையில் நுழைவது குறித்து எந்த முடிவும் இன்னும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும், அரசியல் பாதை எனக்கு எளிதானதே. காலம் சொல்லும்.

ஆனால், என்னைவிட அதிகமானோர் அங்கே உள்ளனர். அரசியலில் பணம் சம்பாதிக்காத ஒரு குடும்பம் உள்ளதென்றால், அது டிரம்ப் குடும்பம் மட்டுமே என்று தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட வாய்ப்புக்காக, சட்ட ரீதியிலான செலவுகள் மற்றும் பல்வேறு விசாரணைகளுக்காக மட்டுமே 500 மில்லியன் டாலரை டிரம்ப் குடும்பம் செலவிட்டதாகவும் கூறினார்.

டிரம்ப் குடும்பத்தின் வணிக செயல்பாடுகளை எரிக் டிரம்ப்தான் கவனித்து வருகிறார். டிரம்ப் அமைப்பின் மதிப்பை 8 பில்லியன் டாலரிலிருந்து 12 பில்லியன் டாலராக எரிக் டிரம்ப்தான் உயர்த்தினார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

வங்கதேசம்: பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் இரு மதத்தினரிடையே மோதல்!

வங்கதேசத்தில் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால், இரு மதத்தினரிடையே மோதல் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தில் ராமச்சந்திரபூர் பச்கிட்டா கிராமத்தில், ஜூன் 26 ஆம் தேதியில் 21 வயது (இந்து) பெண்ண... மேலும் பார்க்க

அடுத்த 2.5 ஆண்டுகளில் வேலை பறிபோகும் அபாயம்! ஏஐ ஆக்கிரமிப்பால் ஊழியர்கள் கவலை!

செய்யறிவு தாக்கத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் பல்வேறு வேலைகள் பாதிக்கப்படும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் செய்யறிவின் (செயற்கை நுண்ணறிவு) தாக்கம் குறித்து பிளைண்ட் குரூப்ஸ் கரு... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பிறப்புரிமை குடியுரிமை உத்தரவு: விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது -அமெரிக்க உச்சநீதிமன்றம்

பிறப்பின் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் மாற்றம் செய்து அந்நாட்டு அதிபா் டிரம்ப் கையொப்பமிட்ட நிா்வாக உத்தரவுக்கு நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது என்று அந்நாட்டு ... மேலும் பார்க்க

உக்ரைன்: ட்ரோன் தாக்குதலில் தம்பதி உயிரிழப்பு

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷியாநடத்திய ட்ரோன் தாக்குதலில் கணவன்-மனைவி உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா்.இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:ஒடேசா நகரில் ரஷியா ஏவ... மேலும் பார்க்க

காங்கோ - ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்

காங்கோவின் கிழக்குப் பகுதியில் தொடா்ந்து நடைபெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்கும், அண்டை நாடான ருவாண்டாவுக்கும் இடையே அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பம... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடருகிறது: இன்றைய பலி எண்ணிக்கை 49!

காஸாவில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 49 பேர் வரை கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) இரவு தொடங்கி சனிக்கிழமை(ஜூன் 28) வரையிலு... மேலும் பார்க்க