செய்திகள் :

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்- 3 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்

post image

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் பலியானார்கள்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பூரியில் உள்ள குந்திச்சா கோயிலுக்கு முன்னால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பக்தர்கள் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்கள் போலகரைச் சேர்ந்த பசந்தி சாஹு, பாலிபாட்னாவைச் சேர்ந்த பிரேமகாந்த் மொஹந்தி மற்றும் பிரவதி தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் அவர்கள் மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 'பஹாட' சடங்கு தொடங்கவிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதனால் தேர்களில் பொருத்தப்பட்ட தெய்வங்களைப் பார்க்க முயன்ற பக்தர்கள் திடீரென பெருமளவில் குவிந்தனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்டநெரிசலில், மூன்று பக்தர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவைக்காண ஸ்ரீகுந்திச்சா கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடியுள்ளனர். ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோயிலுக்கு இழுத்துவரப்படும்.

summary

The incident occurred when the ‘pahada’ ritual was about to begin, leading to a sudden swell of devotees trying to catch a glimpse of the deities installed on the chariots.

ஜூன் 29 ஞாபகமிருக்கிறதா? பிசிசிஐ வெளியிட்ட விடியோ!

2015-ல் 25 கோடி பேர்; தற்போது 95 கோடி பேருக்கு பயன்! பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவில் 95 கோடி பேர் சமூகப் பாதுகாப்பு சலுகையைப் பயன்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே இரு உடல்கள் மீட்பு

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே சிதைந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே மைனர் பெ... மேலும் பார்க்க

பிஇ கட்-ஆஃப் அதிகரிக்கும்: கல்வியாளா்கள் தகவல்

நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்தனா்.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.... மேலும் பார்க்க

உத்தரகாசியில் மேக வெடி: தொழிலாளர்கள் 9 பேர் மாயம்

உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானார்கள். உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் பர்கோட் பகுதியில் சிலாய் வளைவு அருகே ஞாயிற்றுக... மேலும் பார்க்க

தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்சகம் கண்டனம்!

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில் சனிக்கிழமையில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலுக்... மேலும் பார்க்க

உலக தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம்! நீரஜ் சோப்ரா ஓராண்டு வெற்றி!

ஈட்டி எறிதல் உலக தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் முதலிடத்தைப் பெற்றார்.பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின்போது, ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் நீரஜ் சோப்ராவின் முதலிடத்தை கிரெனடா வீ... மேலும் பார்க்க