செய்திகள் :

Puri stampede: பூரி ஜெகன்நாதர் கோயில்: ரதயாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி; 50 பேர் காயம்

post image

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒடிசா பூரி ஜெகன்நாதர் கோயில் ரதயாத்திரை மிகவும் பிரபலம். இந்த ரதயாத்திரையைக் காண கோடிக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வருவதுண்டு. இந்த ரதயாத்திரையின் போது பூரி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு ரதயாத்திரை கடந்த 27ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 7 நாட்கள் இந்த ரதயாத்திரை நடைபெறும். 7 நாட்களும் ரதயாத்திரையை கண்டு தரிசிக்கும் பக்தர்கள் இறந்த பிறகு நேரடியாக வைகுண்டத்திற்குச் செல்வார்கள் என்று என்பது ஐதீகம். இன்று காலை 4 மணிக்கு ரதம் குண்டிச்சா கோயில் அருகில் வந்தது. அங்கு அதிகாலையில் ஜெகன் நாதரை தரிசிப்பதற்காக பல ஆயிரம் பக்தர்கள் கூடியிருந்தனர். ரதம் மக்கள் வெள்ளத்தில் சென்று கொண்டிருந்தது. அந்நேரம் மரக்கம்புகளை ஏற்றிக்கொண்டு இரண்டு லாரி கூட்டத்திற்குள் வந்தது.

அந்நேரம் போலீஸாரும் சொற்ப எண்ணிக்கையில் இருந்தனர். லாரி ரதம் அருகில் வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உடனே பக்தர்கள் முண்டியத்துக்கொண்டு ஓடினர். இதனால் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். சிலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பக்தர்கள் ஏறிச்சென்றனர். இதில் 3 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் 50 பேர் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் 12 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்குக் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அதோடு வி.ஐ.பி.க்களுக்கு சிறப்பு வழியை ஏற்படுத்தி விட்டு பக்தர்களை வழிபடவிடாமல் நீண்ட தூரத்தில் நிறுத்தி வெளியில் அனுப்பி விடுவதாக ஸ்வாதின் குமார் என்ற பக்தர் குற்றம் சாட்டினார். அதோடு அதிகாரிகள் போக்குவரத்தையும் சரியாக ஒழுங்குபடுத்தவில்லை. ரதம் சென்ற வழித்தடத்தில் இதர வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். தற்போது நடந்துள்ள கூட்ட நெரிசலுக்கு மாநில அரசுதான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

``மாமியார் வீட்டில் மரியாதை இல்லை..'' - மனைவியை கொலை செய்த கணவர் பகீர் வாக்கு மூலம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் படுவூர் காட்டுவழி பகுதியைச் சேர்ந்தவர் டார்வின்(46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பபிதா நித்யசெல்வி(39). இவர்களுக்கு பென்குரூஸ்(9) என்ற மகனும், டிக்... மேலும் பார்க்க

Yash Dayal: "திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்" - RCB வீரர் யஷ் தயாள் மீது இளம்பெண் புகார்

இந்தாண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியில் கடந்த இரண்டாண்டுகளாக முக்கிய பவுலராகத் திகழும் யஷ் தயாள், திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச பெண் ஒருவர் புகாரளித்தி... மேலும் பார்க்க

`தலைமறைவான ஜெகன் மூர்த்தி?' - தனிப்படை அமைத்த சிபிசிஐடி! - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் காதல் திருமணம் செய்த வாலிபரை ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்தி சென்று மிரட்டி தாக்கிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பார... மேலும் பார்க்க

`கச்சத்தீவு மீட்பு மாநாடு' நடத்தி விட்டு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்.. கடலில் சிறை பிடித்த இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற போதும் மீனவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு... மேலும் பார்க்க

மரத்தில் தொங்கிய உடல்; கொலையா?தற்கொலையா? கேள்வி கேட்கும் அரசியல் கட்சிகள்; என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சென்னாக்கால்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). கூலித் தொழிலாளியான முருகனுக்கு மணிமேகலை என்ற மனைவியும், கலாவதி, காவியா என்ற மகள்களும் உள்ளனர். இந்நிலையி... மேலும் பார்க்க

விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம்; திருப்புவனம் காவல்நிலையத்தில் உறவினர்கள் போராட்டம்.. நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.இக்கோயிலில் தனியார் நிறுவனம் மூலம் அப்பக... மேலும் பார்க்க