செய்திகள் :

கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை: ‘தனியாகச் சென்ற மாணவி மீதே தவறு’ - ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை!

post image

கொல்கத்தா: கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரிக்கு தனியாகச் சென்றது தவறு என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மதன் மித்ரா பேசியிருப்பது அக்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் இருக்கும் கல்லூரி ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவரை இந்நாள் மாணவா் இருவரும், முன்னாள் மாணவா் ஒருவரும் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் அம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை 3 பேரையும் கொல்கத்தா போலீஸ் கைது செய்தது. இந்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

என்ன சொன்னார்?

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மதன் மித்ரா சனிக்கிழமை(ஜூன் 28) பேசுகையில், “இச்சம்பவம் மாணவிகளுக்கு ஒரு செய்தியை கொண்டு சேர்க்கிறது. அது என்னவெனில், கல்லூரி மூடியிருக்கும் வேளையில் உங்களை(பெண்களை) எவர் ஒருவராவது அழைத்தால் அப்போது அங்கு தனியாகச் செல்லாதீர்கள். அதனால் எவ்வித நல்லதும் நடக்கப் போவதில்லை. பாதிக்கப்பட்ட அந்த பெண் சம்பவ இடத்துக்கு அன்று செல்லாமல் தவிர்த்திருந்தால், இந்த கொடூரம் நிகழ்ந்திருக்காது” என்றார்.

அவரது இந்த கருத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் மீதே முதலில் தவறு இருப்பதாக பொருள் உணர முடிவதாகக் கூறி அவருக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, எம்எல்ஏ மதன் மித்ரா பேசியிருப்பது அவரது சொந்த கருத்து. இதற்கும் தங்கள் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் கண்டனம் தெரிவித்தும் உடனடியாக திரிணமூல் காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டது.

இந்தநிலையில், இது தொடர்பாக மதன் மித்ராவிடம் உரிய விளக்கம் கேட்டு திரிணமூல் காங்கிரஸ் தலைமை இன்று(ஜூன் 29) அழைப்பாணை அனுப்பியுள்ளது. மூன்று நாள்களுக்குள் அவர் விளக்கமளிக்க அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Kolkata gangrape case: TMC issues show-cause notice to Madan Mitra for his controversial remarks

தில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறக்கம்

ஏர் இந்தியாவின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ‘ஏஐ - 357’ ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரிலுள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புது தில்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ... மேலும் பார்க்க

ஹிந்தி எதிர்ப்பு எதிரொலி: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்பட்டதாக அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) அறிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்ப... மேலும் பார்க்க

புரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.இந்த விழாவில்... மேலும் பார்க்க

தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க செயற்கை மழை சோதனை: ஜூலை 4 தொடக்கம்!

புது தில்லி: தில்லியில் காற்று மாசு பிரச்னையை எதிா்க்கொள்ளும் விதமாக செயற்கை மழையை பொழியச் செய்யும் முன்னோட்ட சோதனை ஜூலை 4 முதல் 11 வரை செயல்படுத்தப்படவிருக்கிறது. ஐஐடி கான்பூர் இதற்கு தேவையான தொழில்ந... மேலும் பார்க்க

மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறப்பு! - எங்கே?

தேசிய மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வாரிய தலைமையகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 29) திறந்து வைத்தார்.தெலங்கானாவிலுள்ள நிஸாமாபாத் நகரில் மஞ்சள் வாரி... மேலும் பார்க்க

புதுப்பொலிவுடன் பஹல்காம்! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் பஹல்காம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுத... மேலும் பார்க்க