செய்திகள் :

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு!

post image

காஸாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களின் எதிரொலியாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த அசாதரண சூழலில் காஸாவில் உணவின்றி தவிக்கும் பாலஸ்தீன சமூகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பது சர்வதேச சமூகத்தில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காஸாவுக்குச் செல்லும் உணவுகள் உள்பட பிற பொருள்கள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தை மீறி மக்களுக்குச் சென்றடைவது பெருமளவில் தடைபட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகையில், போதிய உணவின்றி தவிப்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் 66 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தனர்.

போர் குற்றச் செயல்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதையே இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதாகவும், மக்களை உணவுக்கக தவிக்கச் செய்து அதனால் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நிகழ்த்த இஸ்ரேல் காய் நகர்த்துவதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காஸாவில் 21 மாதங்களாக நீடிக்கும் சண்டைக்கு தீர்வாக, அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்படிக்கையாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிபடச் சொல்லியிருப்பதால் விரைவில் அப்பகுதியில் அமைதி நிலைநாட்டப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

பாகிஸ்தான்: மழையால் 38 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் பலத்த மழையால் 38 போ் உயிரிழந்தனா். பாகிஸ்தானில் கடந்த 26-ஆம் தேதிமுதல் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை கொட்டுகி... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு: அமெரிக்க அதிபா் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்

‘காஸாவில் 20 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு காண அமைதிப் பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினாா். போா்நிறுத... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்!

உக்ரைனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவுகணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா். கடந்த 2022-ஆ... மேலும் பார்க்க

தான்சானியாவில் பேருந்துகள் மோதல்: 37 போ் உயிரிழப்பு!

வடக்கு தான்சானியாவின் தொலைதூர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 37 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா். கிளிமஞ்சாரோ பிராந்தியத்தில் மோஷிடங்கா நெடுஞ்சாலையில் உ... மேலும் பார்க்க

அமெரிக்க வரிச் சலுகை, செலவினக் குறைப்பு மசோதா: விவாதம் நடத்த நாடாளுமன்ற மேலவை ஒப்புதல்!

அமெரிக்க அரசின் வரிச் சலுகை மற்றும் செலவினக் குறைப்பு மசோதா மீது விவாதம் மேற்கொள்ள, அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ என்ற வரிச் சலுகை மற்று... மேலும் பார்க்க

வங்கதேசம்: பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் இரு மதத்தினரிடையே மோதல்!

வங்கதேசத்தில் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால், இரு மதத்தினரிடையே மோதல் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தில் ராமச்சந்திரபூர் பச்கிட்டா கிராமத்தில், ஜூன் 26 ஆம் தேதியில் 21 வயது (இந்து) பெண்ண... மேலும் பார்க்க