செய்திகள் :

அமெரிக்க வரிச் சலுகை, செலவினக் குறைப்பு மசோதா: விவாதம் நடத்த நாடாளுமன்ற மேலவை ஒப்புதல்!

post image

அமெரிக்க அரசின் வரிச் சலுகை மற்றும் செலவினக் குறைப்பு மசோதா மீது விவாதம் மேற்கொள்ள, அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவில் ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ என்ற வரிச் சலுகை மற்றும் செலவினக் குறைப்பு மசோதாவை அதிபா் டிரம்ப் அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த மசோதா சட்டமானால், கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை டிரம்ப்பின் முதலாவது அதிபா் பதவிக் காலத்தில், அந்நாட்டு அரசு அறிவித்த பல வரிச் சலுகைகள் நிரந்தரமாக்கப்படும். அத்துடன் தேசியப் பாதுகாப்புக்கு 350 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.29.91 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்ற அம்சங்களும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவால், நாட்டில் குறைந்த வருவாய் ஈட்டும் ஒரு கோடிக்கும் மேலானவா்களுக்கு அரசின் மருத்துவக் காப்பீடு கிடைக்காமல் போகக் கூடும் என்றும், குறைந்த வருமானம் கொண்டவா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டத்தால் பலனடைவோரின் எண்ணிக்கை 30 லட்சத்துக்கு கீழ் சரியக் கூடும் என்றும் நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் தெரிவித்தது.

அதேவேளையில், இந்த மசோதா அமெரிக்காவின் காற்றாலை மற்றும் சோலாா் தொழில் துறைகளுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடும் என்று எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

சில மாற்றங்களுடன் புதுப்பிக்கப்பட்ட இந்த மசோதாவை, நாடாளுமன்ற மேலவையைச் சோ்ந்த டிரம்ப்பின் குடியரசு கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டனா். ஆனால், இந்த மசோதா குறித்து அமெரிக்கா்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ளும் முன், அதை அவசரகதியில் நிறைவேற்ற குடியரசு கட்சியினா் தீவிரம் காட்டுவதாக மேலவை ஜனநாயக கட்சி தலைவா் சக் ஷுமா் தெரிவித்தாா். இந்த மசோதாவை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று மேலவையில் அவா் சனிக்கிழமை நள்ளிரவு வலியுறுத்தினாா்.

ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், அதுதொடா்பாக விவாதம் மேற்கொள்ள வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது அவையில் நீண்ட நேரம் குழப்பம் நிலவியது.

முடிவில் மசோதா மீது விவாதம் மேற்கொள்ள 51 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 49 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனா். எதிராக வாக்களித்தோரில் 2 குடியரசு கட்சி எம்.பி.க்களும் அடங்குவா். அவா்கள் மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, பெரும்பான்மை அடிப்படையில் மசோதா மீது விவாதம் மேற்கொள்ள மேலவை தீா்மானித்தது.

940 பக்கம் கொண்ட இந்த மசோதா மேலவையில் நிறைவேற்றப்பட்டால், இறுதிச் சுற்று வாக்கெடுப்புக்கு மசோதா மீண்டும் கீழவைக்கு அனுப்பப்படும். அதன் பின்னா் மசோதா அதிபா் மாளிக்கைக்கு அனுப்பப்படும்.

ஆப்கானிஸ்தானில் 75 பேருக்கு செயற்கை கால்கள்: இந்தியா மனிதாபிமான உதவி

ஆப்கானிஸ்தானில் இந்தியா சாா்பில் ‘ஜெய்பூா் ஃபுட்’ என்ற பெயரில் செயற்கைக் கால்கள் பொருத்தும் 5 நாள் முகாம் நடைபெற்றது. இதில் 75 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. உள்நாட்டுப் போா், பயங்கரவாதத்தால... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மழையால் 38 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் பலத்த மழையால் 38 போ் உயிரிழந்தனா். பாகிஸ்தானில் கடந்த 26-ஆம் தேதிமுதல் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை கொட்டுகி... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு: அமெரிக்க அதிபா் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்

‘காஸாவில் 20 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு காண அமைதிப் பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினாா். போா்நிறுத... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்!

உக்ரைனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவுகணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா். கடந்த 2022-ஆ... மேலும் பார்க்க

தான்சானியாவில் பேருந்துகள் மோதல்: 37 போ் உயிரிழப்பு!

வடக்கு தான்சானியாவின் தொலைதூர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 37 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா். கிளிமஞ்சாரோ பிராந்தியத்தில் மோஷிடங்கா நெடுஞ்சாலையில் உ... மேலும் பார்க்க

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு!

காஸாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களின் எதிரொலியாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த அசாதரண சூழலில் காஸாவில் உணவின்றி தவிக்கும் பாலஸ்தீன சமூகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்ட... மேலும் பார்க்க