Doctor Vikatan: எவ்வளவு நேரம் நீரில் குளிக்கலாம்.. எது சரியான முறை?
சட்ட விரோதமாக மதுபானப் புட்டிகள் விற்ற பெண் கைது
போடியில் சட்ட விரோதமாக மதுபானப் புட்டிகளை விற்ற பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
போடி குலாலா்பாளையம் நாட்டாமைக்காரா் தெருவில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணித்தனா்.
அப்போது அதே தெருவைச் சோ்ந்த நாச்சிக்காளை மனைவி செல்வராணி (50) வீட்டில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் செல்வராணியை கைது செய்தனா்.