செய்திகள் :

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

post image

காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தென் மேற்கு பருவ மழையின் காரணமாக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடக அணைகள் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் அங்கிருந்து அதிக அளவு உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 25 ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

அன்றைய தினம் 112 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையின் 92 ஆண்டுகால வரலாற்றில் 44-வது ஆண்டாக முழு கொள்ளவான 120 அடியை எட்டி உள்ளது.

மேட்டூர் அணை

கடந்த ஆண்டு ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி, டிசம்பர் 31 ஆம் தேதி என மூன்று முறை மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

நடப்பாண்டில் முதல் முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து அணையின் இடது கரையில் 16 கண் பாலம் அருகே நீர்வளத்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் செய்து காவிரி அன்னையை வழிபட்டனர்.

இதனையடுத்து, எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தற்போது 4 மதகுகளில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் 12 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Kovai Rain: விடாது பெய்யும் மழை; கோவையில் நிரம்பும் அணைகள்.. வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கனமழை ப... மேலும் பார்க்க

நீலகிரி கனமழை: வாகனங்கள் மீது விழுந்த மரங்கள், சுற்றுலாத் தலங்கள் தொடர்ந்து மூடல்.. நிலவரம் என்ன?

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்திருக்கிறது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, பார... மேலும் பார்க்க

கேரளாவில் அதி தீவிர மழை; ஒரே நாளில் 4 பேர் பலி, 2 பேர் மாயம்.. 11 மாவட்டங்களுக்கு விடுமுறை!

கேரள மாநிலத்தில் கடந்தமாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடந்து கேரளா முழுவதும் மழை பெய்துவருகிறது. கர்நாடகா, ஆந்திரா, ஒடிஷா கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த சுழற்சி மண்டலம் காரணமாக... மேலும் பார்க்க

ஊட்டியில் மீண்டும் கனமழை, அடுத்தடுத்து விழும் மரங்கள்.. பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் கனமழை பெய்தது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு வாரம் பெய்த அந்த தொடர் கனமழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது.ச... மேலும் பார்க்க

Ooty : நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை, நிரம்பும் நீர்நிலைகள்!

தென்னகத்தின் தண்ணீர் தொட்டி என வர்ணிக்கப்படும் நீலகிரியில் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கி தற்போதைய புதிய திட்டங்கள் வரை பல்வேறு அணைக்கட்டுகளைத் தொடர்ந்து கட்டி வருகின்றனர். நீலகிரி மட்டுமன்றி சமவெளி பகு... மேலும் பார்க்க