செய்திகள் :

MP: `90 டிகிரியில் திரும்பும் அபாயகரமான மேம்பாலம்' -கடும் எதிர்ப்பால் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்

post image

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் அந்த மேம்பாலங்கள் சில நேரங்களில் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல் கட்டிவிடுவார்கள். அது போன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநில, போபாலில் ரயில் நிலையம் அருகில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரயில்வே மேம்பாலம் ரூ.18 கோடியில் கட்டப்பட்டது.

இந்த மேம்பாலம் அருகில் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மேம்பாலம் கட்டுவதற்கு போதிய நிலம் இல்லாமல் இருந்தது. பாலம் கட்டும் போதே அதன் வடிவமைப்பு மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. பாலம் எந்த விதவளைவும் இல்லாமல் திடீரென செங்குத்தாக திரும்பும் விதமாக கட்டியுள்ளனர்.

இது குறித்த விமர்சனங்கள் வந்தபோது, எங்களுக்கு இப்படி கட்டுவதை தவிர வேறு வழியில்லை என்று தங்களது மேம்பால டிசைனை பொறியாளர்கள் நியாயப்படுத்தினர்.

அருகில் மெட்ரோ ரயில் நிலையம் இருப்பதாலும், போதிய நிலம் இல்லாததாலும் இப்படித்தான் கட்டமுடியும் என்று பொறியாளர்களும், கட்டுமானநிறுவனமும் தெரிவித்தது.

பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறக்கப்படும் நிலை வந்தபோது பாலத்தை பார்த்த பலரும் கடுமையாக விமர்சித்தனர். இப்பாலத்தில் வாகனங்கள் சென்றால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அப்பாலத்தை போக்குவரத்திற்கு திறக்காமல் மாநில அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

இது குறித்து விசாரிக்க அரசு உத்தரவிட்டது. அந்த விசாரணையின் அடிப்படையில் மாநில அரசு தலைமை பொறியாளர்கள் இரண்டு பேர் உள்பட 7 பொறியாளர்கள் உடனே பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

90 டிகிரி திருப்பத்துடன் கட்டப்பட்ட மேம்பாலம்

அதோடு இந்த மேம்பாலத்தை வடிவமைத்து கொடுத்த நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கும் மாநில அரசு தடை விதித்தது. இது குறித்து மாநில முதல்வர் மோகன் யாதவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தலைமை பொறியாளர் வி.டி.சர்மா கூறுகையில், அருகில் வேறு நிலம் இல்லை. எனவே வேறு வழியில்லாமல் அப்படி கட்டவேண்டிய நிலை ஏற்பட்டது'' என்று தெரிவித்தார்.

தற்போது பாலத்தின் வடிவமைப்பில் மாற்றம் செய்த பிறகுதான் பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

``பயிற்சி, ஊக்கம் கொடுத்தால் ஆப்பிள் சாகுபடியில் வருவாய் ஈட்ட முடியும்'' -கொடைக்கானல் விவசாயி சாதனை

கொடைக்கானல் கவுஞ்சி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி தன்னுடைய நிலத்தில் ஆப்பிள், குங்குமபூ போன்றவற்றை நட்டு வைத்து 3 வருட காலம் பராமரித்து தற்போது ஆப்பிள் சாகுபடி செய்வதற்கு தயாராக உள்ளார். ஜம்மு காஷ்மீரின்... மேலும் பார்க்க

``நான் ஒரு தீவிர இந்து; மதச்சார்பற்றவராக இருக்க முடியாது.." - RSS பாணியில் பேசிய அஸ்ஸாம் முதல்வர்!

"சோசலிசம்" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற சொற்களை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான "பொற்காலம்" இது என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருக்கிறார். 'தி எமர்ஜென்சி டைரீஸ் - இயர்ஸ் தட்... மேலும் பார்க்க

திருப்புவனம் லாக்கப் மரணம்: ``பணியிடைநீக்கம் மட்டுமே நீதியா? கொலை வழக்கு பதியாதது ஏன்?'' - சீமான்

கடந்த 4 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட காவல்துறை விசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இந்தி திணிப்பு வாபஸ்; ரத்து செய்யப்பட்ட தாக்கரே சகோதரர்கள் பேரணி.. பின்னணி என்ன?

மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி கற்றுக்கொடுக்கப்படும் என்றும், அது இந்த ஆண்டே நடைமுறைக்கு வரும் என்றும் அரசாணை பிறப்பித்து இருந்தது. இதற்கு எதிர்க்கட்... மேலும் பார்க்க

`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக-வின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்... மேலும் பார்க்க

Maharashtra: ``மும்மொழிக் கொள்கை ரத்து" - பாஜக அரசு 'யு டர்ன்' ஏன்?

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் திருத்தப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்துள்ளது அந்த மாநில பாஜக தலைமையிலான அரசு. எதிர்காலத்தில் மொழிக்கொள்கையை எப்படி செயல்படுத்... மேலும் பார்க்க